பக்கம் எண் :

150மலரும் உள்ளம்

கச்சே ரிக்குள் நால்வரையும்
கைதி யாக நிறுத்தினரே.

ஊரார் எல்லாம் சரஸ்வதியை
ஒருங்கே புகழ்ந்து பேசினரே.

சர்க்கார் மெச்சி அவளுக்குத்
தகுந்த பரிசும் தந்தனரே.

சரவணன் இக்கதை கேட்டதுமே
சந்தோ ஷத்தால் பூரித்தான்.

“சமயம் பார்த்து யுக்தியுடன்
சரியாய்க் காரியம் நீசெய்தாய்.

புத்தி மிகுந்த உன்னுடைய
புருஷன் ஆனேன்!” எனமகிழ்ந்தான்.