பக்கம் எண் :

மலரும் உள்ளம்151

கோழிக் குஞ்சின் கதை

பையன்:

கோழிக் குஞ்சே, உன்கதையைக்
கூறு வாயோ, என்னிடத்தே?

கோழிக் குஞ்சு:

அப்படி யேநான் கூறுகிறேன்.
அண்ணா கதையைக் கேட்டிடுவாய்.

தாயின் வயிற்றில் சிலநாட்கள்
தங்கி இருந்தேன் அதன்பின்னே,

மூலை ஒன்றில் என்அம்மா
முட்டை யாக இட்டனளே.

அதனைக் கண்ட ஒருமனிதன்
அவனது அருமை மனைவியிடம்,

“முட்டைத் தோசை சுட்டுத்தா.
மிகவும் ஆசை” என்றிடவே,

“அடைக்கு வைப்போம் இதனைநாம்.
அப்புறம் சிறிய குஞ்சுவரும்.