பக்கம் எண் :

மலரும் உள்ளம்161

குழந்தைச் சண்டை

பட்டு என்ற சிறுமியும்
    பார்ப்ப தற்கு அழகுடன்
பட்டு ஆடை உடுத்தியே
    பாலு வீடு வந்தனள்.

ஒன்று சேர்ந்து இருவரும்
    ஓடி யாட வீதியில் 
அன்று ஏதோ சண்டையும்
    அவர்க ளுக்குள் வந்ததே!

சண்டை தன்னில் பாலுவோ
    தள்ளி விட்டான், பட்டுவை.
அண்டை ஓடும் சாக்கடை
    அதனில் பட்டு வீழ்ந்தனள்.

பட்டு மீது கெட்டநீர்
    பட்ட தாலே ஆடையும்
கெட்டுப் போச்சு. "ஓ"வெனக்
    கிளம்ப லாச்சு, அழுகையும்.