பக்கம் எண் :

மலரும் உள்ளம்167

"டப்டப்" சத்தம் பக்கத்து
    ராமு வீட்டில் கேட்கவே,
அப்பா அருகில் வந்தனன்.
    “அடுத்த வீட்டில் பாரப்பா.

வேட்டு வாங்கி ராமுதான்
    விடுகின் றானே, சத்தமும்
கேட்கு தப்பா. எனக்குநீ
    கிடையா தென்றே கூறினாய்”

என்று கூறித் தந்தையை
    இழுத்து வந்தான். இருவரும்
சென்று ராமு வீட்டிலே
    கண்ட தென்ன தெரியுமோ?

வெடிக்கும் சீன வெடியைப்போல்,
    வீம்பு செய்த ராமுவை
அடித்துக் கொண்டு தந்தையார்
    அங்கி ருந்தார்; வெடியில்லை!