பக்கம் எண் :

166மலரும் உள்ளம்

சீன வெடி

“சீன வெடிகள் எங்குமே
    தேடிப் பார்த்தும் இல்லையே.
காண வில்லை, கண்ணிலே,
    கடைகள் தோறும் சென்றுமே,

கம்பி வாணப் பெட்டிதான்
    கடைசி யாக வாங்கினேன்.
வம்பு இன்றி இதனைநீ
    மகிழ்ச்சி யோடு கொளுத்துவாய்”

என்று தந்தை தந்தனர்.
    இதனைக் கேட்ட சீனுவோ,
"ஒன்றும் வேண்டாம்" என்றனன்;
    உதறி அதனைத் தள்ளினன்.

"பட்ச ணங்கள் தின்னவோ,
    பட்டு ஆடை உடுத்தவோ
இஷ்ட மில்லை" என்றனன்.
    யார்உ ரைத்தும் கேட்டிலன்.