பக்கம் எண் :

மலரும் உள்ளம்171

கூறிக் கொண்டே இப்படிக்
    குரங்கு ஓடி மரத்திலே
ஏறிக் கொள்ள லானது;
    எழும்பி, எழும்பிக் குதித்தது.

ஆட்டம் ஆடிக் குதிக்கையில்
    அங்கே கிளையில் சட்டையும்
மாட்டிக் கொண்டு விட்டது!
    வலிந்து குரங்கு இழுத்தது.

இழுத்து, இழுத்துப் பார்த்துமே
    எடுக்க முடிய வில்லையே!
கழுத்து நொந்து போனது;
    கர்வம் ஒடுங்க லானது.

“மரங்கள் தம்மில் தொத்தியே
    மகிழ்ச்சி யோடு தாவிடும்
குரங்கே நானும் என்பதைக்
    கொஞ்ச மேனும் எண்ணிலேன்.

மாட்டிக் கொண்டேன் சட்டையை
    மனிதர் போல. ஆதலால்,
மாட்டிக் கொண்டு தவிக்கிறேன்.
    வந்து உதவும், நண்பரே”