கோபம் கொண்டு அவனுமே
குதித்துக் கொண்டு எழுந்தனன்.
"காகா, காகா கா"வெனக்
கடுமை யாகக் கத்தின.
நாகம் போலச் சீறினன்;
நாயைப் போலப் பாய்ந்தனன்.
"காகா" என்றே திரும்பவும்
கத்திக் கொண்டே எழும்பின.
வேக மாக அவனுமே
விரட்ட எண்ணி ஓடினான்.
"காகா காகா கா"வெனக்
கதறிக் கொண்டே பறந்தன.
விரைந்தே அவனும் அவைகளை
விரட்டிக் கொண்டே ஓடினன்.
துரத்திச் சென்றான். ஆதலால்,
சோம்பல் பறந்து போனதே!
தூக்கம் தன்னைப் போக்கவும்,
சுறுசு றுப்பாய் ஓடவும்
ஊக்கம் தந்த காக்கைகள்
உலகில் வாழ்க, வாழ்கவே!
|