ஏமாற்றம்
ஒருநா ளிரவு படித்திடவே
உட்கார்ந் தேன்நான் தங்கையுடன்.
"கடகட" எனவே ஒருசத்தம்
கதவி லிருந்து வந்ததுவே.
“யாரது?” என்றே நான்கேட்டேன்.
யாரும் “நான்தான்” எனவில்லை!
திரும்பப் பதிலே வரவில்லை.
திருடன் எனவே எண்ணிவிட்டேன்.
பயத்தால் என்னுடல் நடுங்கியது.
பார்த்தனள், தங்கை; சிரித்தனளே.
“ஐயோ! அச்சம் கொள்கின்றாய்.
ஆணோ நீதான்?” எனக்கேட்டாள்.
எழுந்தேன் விரைவாய், இடம்விட்டே.
எடுத்தேன் தடியைக் கைதனிலே.
|