பக்கம் எண் :

184மலரும் உள்ளம்

ஏமாற்றம்

ஒருநா ளிரவு படித்திடவே
உட்கார்ந் தேன்நான் தங்கையுடன்.

"கடகட" எனவே ஒருசத்தம்
கதவி லிருந்து வந்ததுவே.

“யாரது?” என்றே நான்கேட்டேன்.
யாரும் “நான்தான்” எனவில்லை!

திரும்பப் பதிலே வரவில்லை.
திருடன் எனவே எண்ணிவிட்டேன்.

பயத்தால் என்னுடல் நடுங்கியது.
பார்த்தனள், தங்கை; சிரித்தனளே.

“ஐயோ! அச்சம் கொள்கின்றாய்.
ஆணோ நீதான்?” எனக்கேட்டாள்.

எழுந்தேன் விரைவாய், இடம்விட்டே.
எடுத்தேன் தடியைக் கைதனிலே.