பக்கம் எண் :

மலரும் உள்ளம்197

சப்த மில்லை, புகையில்லை,
    சாது போலக் கிடப்பதைக்
குப்பன் கண்டான். கண்டதும்
    கூற லானான் பிறரிடம்:

“நெருப்பு அணைந்து போனது.
    நீண்ட நேரம் ஆனது.
அருகில் சென்றே எடுத்திட
    ஐயோ! அச்சம் கொள்வதேன்?

பயந்து நடுங்கும் புலிகளே!
    பார்ப்பீர், அதனை எடுக்கிறேன்;
தயங்க மாட்டேன்” என்றனன்,
    தாவி அருகில் சென்றனன்.

கிட்டச் சென்று வெடியினைத்
    தொட்டுப் பார்க்கும் முன்னரே
"பட்பட்" டென்று வெடித்தது!
    பாய்ந்து முகத்தில் அடித்தது!

குப்பன் அந்த இடத்திலே
    குட்டிக் கரணம் போட்டனன்!
தப்பிப் பிழைத்து விட்டனன்,
    சாமி புண்ணி யத்தினால்!