பக்கம் எண் :

196மலரும் உள்ளம்

ஆனை வெடி

"டப்டப்" பென்ற சப்தமே
    நான்கு திசையும் கேட்டது.
குப்பன் உடனே தெருவிலே
    குதித்து ஓடி வந்தனன்.

சீனு, ராமு இருவரும்
    சேர்ந்து அங்கே நின்றனர்.
சீன வெடியைக் கொளுத்தியே
    தெருவில் எறிய லாயினர்.

சீன வெடிகள் யாவுமே
    தீர்ந்து போன பிறகுமே
ஆனை வெடியைக் கொளுத்தினர்.
    அதனை வீசி எறிந்தனர்.

கீழே விழுந்த வெடியுமே
    கிளம்பி வெடிக்க வில்லையே.
கோழை போலக் கிடந்தது!
    கொஞ்சம் நேரம் ஆனது.