ஜவஹரின் குதிரை
குழந்தை யாக இருந்த போது
ஜவஹர் லாலுடன்
குதிரைக் குட்டி ஒன்று கூட
இருந்து வந்தது.
அழகு மிக்க குதிரைக் குட்டி
அதனில் ஏறியே
அலகா பாத்து நகரைச் சுற்றித்
தினமும் வருவாரே.
அன்றொ ருநாள் குதிரை மீது
ஜவஹர் ஏறியே,
ஆனந் தமாய் ஊரை யெல்லாம்
சுற்றும் போதிலே,
என்ன அந்தக் குதிரைக் குட்டி
நினைத்து விட்டதோ!
என்றும் இல்லா வேகத் தோடே
ஓட லானது!
|