பக்கம் எண் :

214மலரும் உள்ளம்

பிரம்ம தேவனே!

எனக்கு ஒற்றை வாயைத் தந்த
    பிரம்மதேவனே,
ஏனோ கூட மூன்று வாய்கள்
    பிரம்மதேவனே,
உனக்கு மட்டும் வைத்துக் கொண்டாய்
    பிரம்மதேவனே?
உலகில் இதுவும் நீதி யாமோ
    பிரம்மதேவனே!

பட்ச ணங்கள் அதிக மாகத்
    தின்றுதீர்க்கவோ
படைத்துக் கொண்டாய் நான்கு வாய்கள்
    பிரம்மதேவனே.
பட்ச பாதம், பட்ச பாதம்,
    பிரம்மதேவனே.
படைக்கும் போதே காட்ட லாமோ
    பிரம்மதேவனே?