பக்கம் எண் :

மலரும் உள்ளம்213

படுக்கும் கட்டில், மெத்தைகள்,
    பாய்கள், பெஞ்சு யாவிலும்
இடுக்கில் இருந்து கொண்டுநீ
    என்னைக் கடித்து விடுகிறாய்.

இலையைப் போல இருந்தநீ
    "இட்லி" போலப் பருக்கிறாய்.
கொலைதான் செய்யப் போகிறேன்,
    கொடிய மூட்டைப் பூச்சியே !

சேவலே எழுந்திரு!

கொண்டைச் சேவல், கொண்டைச் சேவல்,
    எழுந்திருப்பாயே.
"கொக்க ரக்கோ!" என்று நீயும்
    கூவிடுவாயே!

உறங்கு கின்ற சேவ லேநீ
    எழுந்திருப்பாயே.
உதித்து விட்டான், சூரியனும்.
    கூவிடுவாயே!