பக்கம் எண் :

34மலரும் உள்ளம்

எனக்குச் சிறுநோய் வந்தாலும்
ஏனோ மிகவும் வருந்துகிறாய் ?
உணவு இன்றி உறங்காமல்,
உயிர்போல் என்னைக் காக்கின்றாய்.

உன்னைப் போலே வளர்த்திடுவோர்,
உலகில் உண்டோ வேறொருவர் ?
என்னைக் காக்கும் அம்மாவே,
எனக்குத் தெய்வம் நீதானே.