பக்கம் எண் :

38மலரும் உள்ளம்

தூக்கம் கொள்வ தேனோ ?
       சொல்லக் கேட்பாய், கண்ணே.
சொக்காய் தைத்தேன்; பாராய்.
       ஜோராய்ப் போட்டுக் கொள்வாய்.

அம்மா என்மேல் என்றும்
       அன்பு காட்டக் காண்பாய்.
அம்மா வைப்போல் உன்மேல் 
       ஆசை கொண்டேன், நானே.