பக்கம் எண் :

மலரும் உள்ளம்43

கன்றுக்குட்டி

கன்றே, கன்றே, ஓடிவா.
       காளைக் கன்றே ஓடிவா.
இன்றே கூடி இருவரும்
       இன்ப மாகப் பேசலாம்.

"அம்மா" என்றே நாங்களும்
       அழைக்கி றோமே அன்னையை.
"அம்மா" என்று நீயுமே
       அழைப்ப தெங்கள் பாடமோ ?

பாலைக் குடித்த பிறகுதான்
       வேலை ஒன்றும் இல்லையே.
வாலைத் தூக்கி என்னிடம்
       வளைந்து குதித்து ஓடிவா.

சொறிந்து கொடுத்து உனக்குநான்
       சொன்னேன், ஏதோ வார்த்தைகள்
"சரிதான், சரிதான்" என்றுநீ
       தலையை ஆட்டிக் காட்டுவாய்.