பக்கம் எண் :

42மலரும் உள்ளம்

"சலச"லென்று பறவைகள்
       சத்த மிட்டே வேகமாய்ப்
பலதி சைகள் ஓடுதல்
       பார்க்க நீ யெழுந்திரு.

எழுந்து காலைக் கடனையே
       இனிது நீயும் முடித்திடு.
தொழுது புத்த கத்தினைத்
       திறந்து பாடம் கற்றிடு.