பக்கம் எண் :

48மலரும் உள்ளம்

பறவைக் கப்பல்

பாட்டி, பாட்டி, ஓடிவா.
       பறவைக் கப்பல் மேலேபார்.
வீட்டு மேலே "விர்"ரென
       வேக மாகப் போகுதே!

காட்டைத் தாண்டிச் செல்லுமாம்.
       கடல் கடந்து போகுமாம்.
பாட்டி யைப்போல் அண்ணாந்து
       பலரும் பார்க்கப் பண்ணுமாம்!

பாட்டி, பாட்டி இதனைப்போல்
       பறவைக் கப்பல் முன்பெலாம்
பாட்டன், பாட்டி யாரேனும்
       பார்த்த துண்டோ சொல்லுவாய்?
பாட்டி, நீயும், நானுமே
       பறவைக் கப்பல் ஏறியே,
வீட்டை விட்டுச் செல்லுவோம்.
       வெளியி டாதே, ரகசியம்!