பக்கம் எண் :

மலரும் உள்ளம்55

பள்ளிக்கூடப் பந்தயம்

பள்ளிக் கூடப் பந்தயம்
       பார்க்க லாமே, தம்பிநீ
துள்ளி ஓடி வந்திடு.
       தூரம் அதிகம் இல்லையே!

ரொட்டித் துண்டைக் கயிற்றிலே,
       கட்டி விட்டுக் கையையும்
கட்டிப் போட்டால் வேகமாய்
       எட்டி,எட்டித் தின்னுவோம்.

"ஒன்று, இரண்டு, மூன்று,
       ஓடு வீர்கள், விரைவிலே"
என்று ஒருவர் சொல்லுவார்.
       எடுத்து விடுவோம், ஓட்டமே.

வட்ட மான கோட்டினுள்
       வளைந்து நாங்கள் ஓடுவோம்.
கட்டப் பட்ட கண்ணுடன்
       கண்டு பிடிப்பான், ஒருவனே!