பக்கம் எண் :

மலரும் உள்ளம்57

மலர்

இன்முகம் காட்டிடுமே - அதனால்
       இன்பமும் ஊட்டிடுமே.
நன்மணம் வீசிடுமே - சுற்றி
       நான்கு திசைகளுமே.

வண்டுகள் தேன்விரும்பி - நாடி
       வந்திடும் மொய்த்திடவே.
கண்டவர் யாவரையும் - இதனது
       காட்சி மயக்கிடுமே.

ஈசன் திருவடியில் - இதுவே
       என்றென்றும் நின்றிடுமே.
பாசமாய் மக்களுமே - இதனைப்
       பறித்துச் சூடுவரே.

மணம் நடக்கையிலே - அங்கே
       மணத்தை வீசிடுமே.
குணம் பெரிதாகும் - ஆனால்
       குற்றம் எதுவுமில்லை.