குணங்கள்
பசு
சத்து நிறைந்த பாலினையே
தந்து நம்மைக் காத்திடுமே
இத்தனை சாதுப் பிராணிதனை
எங்கே னும்நீ கண்டாயோ?
காளை
அண்டை ஊர்கள் சென்றிடவே
வண்டி யிழுத்துச் சென்றிடுமே.
மண்டிப் பயிர்கள் வளர்ந்திடவே,
மண்ணை நன்கு உழுதிடுமே.
நாய்
நன்றி உள்ள உயிர்களிலே
நல்ல மிருகம் இதுவொன்றாம்.
வெற்றி கொண்ட வீரன்போல்
வீட்டைக் காத்து நின்றிடுமே.
|