ஆடு
காந்தித் தாத்தா முதல்யார்க்கும்
கறக்கும் நல்ல பாலினையே
சாந்தம் மிக்கது தாத்தாபோல்.
தஞ்சம் நம்மை அடைந்ததுவே.
சேவல்
கழுத்தை நீட்டிக் கூவிடுமே
காலைப் போதில் சிறகடித்தே
"எழுந்திரு, விழித்திடு" என்றதுவும்
எழுப்பித் தூக்கம் ஓட்டிடுமே.
பூனை
பாலைக் குடித்தும் சாதுவைப்போல்
பஞ்சுக் காலால் நடந்திடுமே.
வேலை அதற்கு வேறில்லை.
வீட்டில் எலிகள் பிடிப்பதுதான்!
காக்கை
உற்றார் உறவினர் அனைவரையும்
உண்ண அழைத்து உண்டிடுமே.
செத்தால் ஒன்று அவைகளிலே
சேர்ந்து யாவும் அழுதிடுமே.
|