பக்கம் எண் :

மலரும் உள்ளம்75

எலி

நமக்கென வைத்த பண்டமெலாம்
       நாடித் தேடித் தின்றிடுமே.
நமக்கெனத் தைத்த சட்டைகளை
       நாசம் ஆகக் கடித்திடுமே.

சிங்கம்

மிரண்டு அஞ்சி நடுங்கிடுவர்
       மிருக ராஜன் என்றிடுவர்.
தரணியில் அதற்குக் காடொன்றே
       தகுதியென் றீசன் வைத்தனனோ!