பக்கம் எண் :

80மலரும் உள்ளம்

அம்மாவின் கவலை

குழந்தை பிறந்தது, பிறந்ததுமே,
"குவாக்குவா" சத்தம் எழுந்ததுவே.

அம்மா அந்தக் குழந்தையினை
ஆர்வத் துடனே பார்த்தனளே. 

கண்ணைப் பார்த்தாள், ஆசையுடன்,
கண்டாள் அதனில் ஒளியினையே.

"என்றன் குழந்தை குருடல்ல"
என்றே அம்மா மகிழ்ந்தனளே

* * *
முகத்தைப் பார்த்துச் சிரித்திடுமாம்.
மூன்று மாதக் குழந்தையினைக்

கையைத் தட்டி அழைத்திடுவாள்.
காதால் கேட்டுத் திரும்பிடுமாம்.

"என்றன் குழந்தை செவிடல்ல"
என்றே அம்மா மகிழ்ந்திடுவாள்.

* * *