அம்மாவின் கவலை
குழந்தை பிறந்தது, பிறந்ததுமே,
"குவாக்குவா" சத்தம் எழுந்ததுவே.
அம்மா அந்தக் குழந்தையினை
ஆர்வத் துடனே பார்த்தனளே.
கண்ணைப் பார்த்தாள், ஆசையுடன்,
கண்டாள் அதனில் ஒளியினையே.
"என்றன் குழந்தை குருடல்ல"
என்றே அம்மா மகிழ்ந்தனளே
* * *
முகத்தைப் பார்த்துச் சிரித்திடுமாம்.
மூன்று மாதக் குழந்தையினைக்
கையைத் தட்டி அழைத்திடுவாள்.
காதால் கேட்டுத் திரும்பிடுமாம்.
"என்றன் குழந்தை செவிடல்ல"
என்றே அம்மா மகிழ்ந்திடுவாள்.
* * *
|