பக்கம் எண் :

மலரும் உள்ளம்81

ஒன்பது மாதம் சென்றதுமே
"உப்புப் புப்"பெனக் கூறிடுவாள்.

அம்மா சொல்வதை அழகாக
அந்தக் குழந்தையும் கூறிடுமாம்.

"என்றன் குழந்தை ஊமையென
எவரும் கூறார்" எனமகிழ்வாள்.

* * *
பத்து மாதம் ஆனதுமே
தத்தித் தத்தித் தவழ்ந்திடுமாம்.

அத்துடன் நிற்கப் பழகிடுமாம்.
அம்மா அதனைக் கண்டதுமே,

"என்றென் குழந்தை சப்பாணி
இல்லை" என்றே மகிழ்ந்திடுவாள்.

* * *
அப்புறம் ஒருசில மாதங்கள்
ஆனதும், அந்தக் குழந்தையுமே,

நன்றாய் நின்று, நேராக
நடக்கப் பழகிடும்; அதுகண்டு,

"என்றன் குழந்தை முடமல்ல"
என்றே அம்மா மகிழ்ந்திடுவாள்.

* * *