பாரத நாடு
ஜய பாரத!
|
சிறந்து நின்ற சிந்தை யோடு
தேயம் நூறு வென்றிவள்
மறந்த விர்ந்தந் நாடர் வந்து
வாழி சொன்ன போழ்தினும்
இறந்து மாண்பு தீர மிக்க
ஏழ்மை கொண்ட போழ்தினும்
அறந்த விர்க்கி லாது நிற்கும்
அன்னை வெற்றி கொள்கவே!
|
1
|
\பு{[பாட பேதம்]: ‘பொருந்து நன்னாடு’‘உன்னத பாரத’
-- நாட்டுப் பாட்டு.}
|
|
நூறு கோடி நூல்கள் செய்து
நூறு தேய வாணர்கள்
தேறும் உண்மை கொள்ள இங்கு
தேடிவந்த நாளினும்,
மாறு கொண்டு கல்வி தேய
வண்மை தீர்ந்த நாளினும்,
ஈறு நிற்கும் உண்மை யொன்று
றைஞ்சி நிற்பள் வாழ்கவே!
|
2
|
வில்லர் வாழ்வு குன்றி ஓய
வீர வாளும் மாயவே
வெல்லு ஞானம் விஞ்சி யோர்செய்
மெய்ம்மை நூல்கள் தேயவும்
சொல்லும் இவ் வனைத்தும் வேறு
சூழ நன்மை யுந்தர
வல்ல நூல் கெடாது காப்பள்
வாழி அன்னை வாழியே!
|
3
|
தேவ ருண்ணும் நன்மருந்து
சேர்ந்த கும்பம் என்னவும்
மேவுவார் கடற்கண் உள்ள
வெள்ளநீரை ஒப்பவும்
பாவ நெஞ்சி னோர் நிதம்
பறித்தல் செய்வ ராயினும்
ஓவிலாத செல்வம் இன்னும்
ஓங்கும் அன்னை வாழ்கவே!
|
4
|
இதந்தரும் தொழில்கள்
செய்து
இரும்பு விக்கு நல்கினள்
பதந்தரற் குரிய வாய
பன்ம தங்கள் காட்டினள்
விதம் பெறும்பல் நாட்டி னர்க்கு
வேறொ ருண்மை தோற்றவே
சுதந்திரத்தி லாசை இன்று
தோற்றி னாள்மன் வாழ்கவே!
|
5
|
\பு{[குறிப்பு]: உபநிஷத்து அல்லது கீதை.
இக் குறியிட்ட பாடல் ‘நாட்டுப் பாட்டு’த் தொகுதியில் இல்லை.}
|