தமிழ்
நாடு
தமிழ்த் தாய்
தன் மக்களைப் புதிய சாத்திரம்
வேண்டுதல்
(தாயுமானவர் ஆனந்தக் களிப்புச்
சந்தம்)
1 |
ஆதி
சிவன்பெற்று விட்டான் |
என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் |
வேதியன்
கண்டு மகிழ்ந்தே |
நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான். |
2 |
மூன்று
குலத்தமிழ் மன்னர் |
என்னை
மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்; |
ஆன்ற மொழிகளி னுள்ளே |
உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன். |
3 |
கள்ளையும்
தீயையும் சேர்த்து |
நல்ல
காற்றையும் வான வெளியையும் |
சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் |
பல
தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார். |
4 |
சாத்திரங்
கள்பல தந்தார் |
இந்தத்
தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்; |
நேத்திரங்
கெட்டவன் காலன் |
தன்முன்
நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான். |
5 |
நன்றென்றுந்
தீதென்றும் பாரான் |
முன்பு
நாடும் பொருள்கள் அனைத்தையும் |
வாரிச்
சென்றிடுங் காட்டுவெள் ளம்போல் |
வையச் சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான். |
6 |
கென்னிப்
பருவத்தில் அந்நாள் |
என்றன்
காதில் விழுந்த திசைமொழி யெல்லாம் |
என்னென்ன
வோபெய ருண்டு |
பின்னர்
யாவும் அழிவுற் றிறந்தன கண்டீர்., |
7 |
தந்தை
அருள்வலி யாலும் |
முன்பு
சான்ற புலவர் தவவலி யாலும். |
இந்தக்
கணமட்டும் காலன் |
என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி யிருந்தான். |
8 |
இன்றொரு
சொல்லினைக் கேட்டேன்! |
இனி
ஏது செய்வேன்? என தாருயிர மக்காள்!் |
கொன்றிடல்
போலொரு வார்த்தை |
இங்கு
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்! |
9 |
“புத்தம்
புதிய கலைகள் |
பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள், |
கூறும்:
மெத்த வளருது மேற்கே |
அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை. |
10 |
சொல்லவும்
கூடுவ தில்லை |
அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை; |
மெல்லத்
தமிழினிச் சாகும் |
அந்த மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்.”) |
11 |
என்றந்தப்
பேதை உரைத்தான் |
ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ! |
சென்றிடுவீர்
எட்டுத் திக்கும் |
கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! |
12 |
தந்தை
அருள்வலி யாலும் |
இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும் |
இந்தப்
பெரும்பழி தீரும் |
புகழ் ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன். |