சுதந்திரப்
பள்ளு
சுதந்திரப் பெருமை
|
“தில்லை வெளியிலே கலந்துவிட்டாலவரி திரும்பியும்
வருவாரோ?” என்னும் வர்ண மெட்டு
|
வீர சுதந்திரம் வேண்டிநின் றார்பின்னர்
வேறொன்று கொள்வாரோ? -- என்றும்
ஆரமு துண்ணுதற் காசைகொண்டார் கள்ளில்
அறிவைச் செலுத்து வாரோ? |
(வீர)
|
1 |
புகழுநல் லறமுமே யன்றியெல் லாம்வெறும்
பொய்யென்று கண்டாரேல் -- அவர்
இகழுறும் இனத்தொண் டியற்றியும் வாழ்வதற்கு
இச்சையுற் றிருப்பாரோ?
|
(வீர)
|
2 |
பிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும்
பெற்றியை அறிந்தாரேல் -- மானம்
துறந்தறம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது
சுகமென்று மதிப்பாரோ?
|
(வீர)
|
3 |
மானுட ஜென்மம் பெறுவதற் கரிதெனும்
வாய்மையை உணர்ந்தாரேல் -- அவர்
ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற
உடன்படு மாறுளதோ?
|
(வீர)
|
4 |
விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்போய்
மின்மினி கொள்வாரோ? --
கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின்
கைகட்டிப் பிழைப்பாரோ? |
(வீர)
|
5 |
மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை யிழப்பாரோ?
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
கைகொட்டிச் சிரியாரோ?
|
(வீர)
|
6 |
வந்தே மாதரம் என்று வணங்கியபின்
மாயத்தை வணங்குவரோ?
வந்தே மாதரம் ஒன்றே தாரகம்
என்பதை மறப்பாரோ? |
(வீர)
|
7 |