சுதந்திரப்
பள்ளு
சுதந்திர தேவியின் துதி்
|
[விருத்தம்]
|
இதந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப்பட் டாலும்
பதந்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுத் திழிவுற் றாலும்
விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட் டாலும்
சுதந்திர தேவி! நின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே. |
1 |
நின்னருள் பெற்றி லாதார்
நிகரிலாச் செல்வ ரேனும்
பன்னருங் கல்வி கேள்வி
படைத்துயர்ந் திட்டா ரேனும்
பின்னரும் எண்ணி லாத
பெருமையிற் சிறந்தா ரேனும்
அன்னவர் வாழ்க்கை பாழாம்
அணிகள்வேய் பிணத்தோ டொப்பார்.
|
2 |
தேவி! நின்னொளி பெறாத
தேயமோர் தேய மாமோ?
ஆவியங் குண்டோ? செம்மை
அறிவுண்டோ? ஆக்க முண்டோ?
காவிய நூல்கள் ஞானக்
கலைகள் வேதங்க ளுண்டோ?
பாவிய ரன்றோ நின்தன்
பாலனம் படைத்தி லாதார்? |
3 |
ஒழிவறு நோயிற் சாவார்
ஊக்கமொன் றறிய மாட்டார்
கழிவுறு மாக்க ளெல்லாம்
இகழ்ந்திடக் கடையில் நிற்பார்
இழிவறு வாழ்க்கை தேரார்
கனவிலும் இன்பங் காணார்
அழிவறு பெருமை நல்கும்
அன்னை நின்அருள் பெறாதார். |
|
4 |
\பு{[பாட பேதம்]:
‘சுதந்திரத் தேவி!’
‘மாக்களெல்லா மிகழ்ந்திட’
-- ஜன்ம பூமி}
|
|
வேறு
|
தேவி! நின்னருள் தேடி யுளந்தவித்து
ஆவியும் தம தன்பு அளிப்பவர்
மேவி நிற்பது வெஞ்சிறை யாயினும்
தாவில் வானுல கென்னத் தகுவதே. |
5 |
அம்மை உன்றன் அருமை யறிகிலார்
செம்மை யென்றிழி தொண்டினைச் சிந்திப்பார்
இம்மை யின்பங்கள் எய்துபொன் மாடத்தை
வெம்மை யார்புன் சிறையெனல் வேண்டுமே.
|
6 |
மேற்றி சைப்பல நாட்டினர் வீரத்தால்
போற்றி நின்னைப் புதுநிலை யெய்தினர்;
கூற்றி னுக்குயிர் கோடி கொடுத்தும்நின்
பேற்றி னைப்பெறு வேமெனல் பேணினர். |
7 |
அன்ன தன்மைகொள் நின்னை அடியனேன்
என்ன கூறி இசைத்திட வல்லனே?
பின்ன முற்றுப் பெருமை யிழந்துநின்
சின்ன மற்றழி தேயத்தில் தோன்றினேன். |
8 |
பேர றத்தினைப் பேணுநல் வேலியே!
சோர வாழ்க்கை, துயர்மிடி யாதிய
கார றுக்கக் கதித்திடு சோதியே!
வீர ருக்கமு தே நினை வேண்டுவேன். |
9 |
\பு{[பாட பேதம்]:
‘நல்குமன்னை’
‘வீரத்தாற்’
-- ஜன்ம பூமி.}
|
|