பக்கம் எண் :

தேசிய கீதங்கள்

தேசியத் தலைவர்கள்

வ.உ.சி.க்கு வாழ்த்து
‘வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார் மன்னனென மீண்டான்’ என்றே
கேளாத கதைவிரைவிற் கேட்பாய்நீ வருந்தலைஎன் கேண்மைக் கோவே!
தாளாண்மை சிறிதுகொலோ யாம்புரிவேம் நீஇறைக்குத் தவங்கள் ஆற்றி,
வாளாண்மை நின்துணைவர் பெறுகெனவே வாழ்த்துதிநீ வாழ்தி! வாழ்தி!

{[குறிப்பு]: “சுயராஜ்ய தினம்” தூத்துக்குடியில் 1908ஆம் ஆண்டு வ.உ.சி., சுப்ரமணிய சிவா முதலியோரால் கொண்டாடப்பட, இருவரும் சிறைப்படுகின்றனர். அது சம்பந்தமான வழக்கில் பாரதியார் சாட்சி கூறினார்.}