பக்கம் எண் :

காவியங்கள் : கற்பனையும் கதையும்


குயில்


குயில் தனது பூர்வ ஜன்மக் கதையுரைத்தலி


“தேவனே! என்னருமைச் செல்வமே! என்னுயிரே!
போவதன்முன் னொன்று புகல்வதனைக் கேட்டருள்வீர்!
முன்னம் ஒருநாள் முடிநீள் பொதியமலை
தன்னருகே நானும் தனியேயோர் சோலைதனில்
மாங்கிளையி லேதோ மனதிலெண்ணி வீற்றிருந்தேன்.
5

ஆங்குவந்தார் ஓர்முனிவர். ஆரோ பெரியரென்று
பாதத்தில் வீழ்ந்து பரவினேன்; ஐயரெனை
ஆதரித்து வாழ்த்தி அருளினார். மற்றதன்பின்,
‘வேதமுனிவரே, மேதினியில் கீழப்பறவைச்
சாதியிலே நான் பிறந்தேன். சாதிக் குயில் களைப்போல்
10


இல்லாமல், என்றன் இயற்கை பிரிவாகி,
எல்லார் மொழியும் எனக்கு விளங்குவதேன்?
மானுடர்போல் சித்தநிலை வாய்ந்திருக்குஞ் செய்தியேன்?
யானுணரச் சொல்வீர்’ எனவணங்கிக் கேட்கையிலே,
கூறுகின்றார் ஐயர்: -- ‘குயிலே, கேள். முற்பிறப்பில்

15

வீறுடைய வெந்தொழிலார் வேடர் குலத்தலைவன்
வீர முருகனெனும் வேடன் மகளாகச்
சேர வளநாட்டில் தென்புறத்தே ஓர்மலையில்
வந்து பிறந்து வளர்ந்தாய் நீ. நல்லிளமை
முந்து மழகினிலே மூன்று தமிழ்நாட்டில்
20

யாரும் நினக்கோர் இணையில்லை என்றிடவே
சீருயர நின்றாய்; செழுங்கான வேடரிலுன்
மாமன் மகனொருவன், மாடனெனும் பேர்கொண்டான்,
காமன் கணைக்கிரையாய், நின்னழகைக் கண்டுருகி,
நின்னை மணக்க நெடுநாள் விரும்பி, அவன்,
25

பொன்னை மலரைப் புதுத்தேனைக் கொண்டுனக்கு
நித்தம் கொடுத்து, நினைவெல்லாம் நீயாகச்
சித்தம் வருந்துகையில், தேமொழியே, நீயவனை
மாலையிட வாக்களித்தாய்; மையலினாலில்லை; அவன்
சால வருந்தல் சகிக்காமல் சொல்லிவிட்டாய்;
30

ஆயிடையே, நின்றன் அழகின் பெருங்கீர்த்தி
தேயமெங்குந் தான்பரவத் தேன்மலையின் சார்பினிலோர்
வேடர்கோன், செல்வமும் நல் வீரமுமே தானுடையான்,
நாடனைத்தும் அஞ்சி நடுங்குஞ் செயலுடையான்,
மொட்டைப் புலியனுந்தன் மூத்த மகனான
35

நெட்டைக் குரங்கனுக்கு நேரான பெண்வேண்டி,
நின்னை மணம்புரிய நிச்சயித்து, நின்னப்பன்
தன்னை யணுகி, “நின்னோர் தையலையென் பிள்ளைக்குக்
கண்ணாலஞ் செய்யும் கருத்துடையேன்” என்றிடலும்,
எண்ணாப் பெருமகிழ்ச்சி எய்தியே, நின்தந்தை
40

ஆங்கே உடம்பட்டான்; ஆறிரண்டு நாட்களிலே
பாங்கா மணம்புரியத் தாமுறுதி பண்ணிவிட்டார்.
பன்னிரண்டு நாட்களிலே பாவையுனைத் தேன்மலையில்
அன்னியன் கொண்டேகிடுவான் என்னும் அதுகேட்டு,
மாடன் மனம்புகைந்து மற்றைநாள் உன்னைவந்து
45

நாடிச் சினத்துடனே நானா மொழிகூற,
நீயும் அவனிடத்தே நீண்ட கருணையினால்,
“காயுஞ் சினந்தவிர்ப்பாய், மாடா, கடுமையினால்
நெட்டைக் குரங்கனுக்குப் பெண்டாக நேர்ந்தாலும்
கட்டுப் படிஅவர்தங் காவலிற்போய் வாழ்ந்தாலும்,
50

மாதமொரு மூன்றில் மருமம் சிலசெய்து
பேதம் விளைவித்துப் பின்னிங்கே வந்திடுவேன்;
தாலிதனை மீட்டுமவர் தங்களிடமே கொடுத்து
நாலிரண்டு மாதத்தே நாயகனா நின்றனையே
பெற்றிடுவேன்; நின்னிடத்தே பேச்சுத் தவறுவனோ?
55

மற்றிதனை நம்பிடுவாய், மாடப்பா” என்றுரைத்தாய்;
காதலி னாலில்லை, கருணையினால் இஃதுரைத்தாய்.
(மாதரசாய், வேடன் மகளான முற்பிறப்பில்,
சின்னக் குயிலியென்று செப்பிடுவார் நின்நாமம்.
பின்னர்ச் சிலதினங்கள் சென்றதன்பின், பெண்குயிலி,
60

நின்னொத்த தோழியரும் நீயுமொரு மாலையிலே
மின்னற் கொடிகள் விளையாடுதல் போலே
காட்டி னிடையே களித்தாடி நிற்கையிலே,
வேட்டைக் கெனவந்தான் வெல்வேந்தன் சேரமான்
தன்னருமை மைந்தன். தனியே, துணைபிரிந்து,
65

மன்னவன்றன் மைந்தனொரு மானைத் தொடர்ந்துவரத்
தோழியரும் நீயும் தொகுத்துநின்றே ஆடுவதை
வாழியவன் கண்டுவிட்டான். மையல் கரைகடந்து
நின்னைத் தனதாக்க நிச்சயித்தான். மாதுநீ
மன்னவனைக் கண்டவுடன் மாமோகங் கொண்டு விட்டாய்.
70

நின்னையவன் நோக்கினான்; நீயவனை நோக்கிநின்றாய்;
அன்னதொரு நோக்கினிலே ஆவி கலந்துவிட்டீர்.
தோழியரும் வேந்தன் சுடர்க்கோலந் தான்கண்டே
ஆழியரசன் அரும்புதல்வன் போலுமென்றே
அஞ்சி மறைந்து விட்டார். ஆங்கவனும் நின்னிடத்தே,
75

“வஞ்சித் தலைவன் மகன்யான்” எனவுரைத்து,
“வேடர் தவமகளே, விந்தை யழகுடையாய்,
ஆடவனாத் தோன்றி யதன்பயனை இன்றுபெற்றேன்;
கண்டதுமே நின்மிசைநான் காதல்கொண்டேன்” என்றிசைக்க,
மண்டு பெருங்காதல் மனத்தடக்கி நீ மொழிவாய்;
80

“ஐயனே, உங்கள் அரமனையில் ஐந்நூறு
தையலருண் டாம்; அழகில் தன்னிகரில் லாதவராம்.
கல்வி தெரிந்தவராம்; கல்லுருகப் பாடுவராம்;
அன்னவரைச் சேர்ந்தேநீர் அன்புடனே வாழ்ந்திருப்பீர்;
மன்னவரை வேண்டேன் மலைக்குறவர் தம்மகள்யான்;
85

கொல்லுமடற் சிங்கம் குழிமுயலை வேட்பதுண்டோ?
வெல்லுதிறல் மாவேந்தர் வேடருள்ளோ பெண்ணெடுப்பார்?
பத்தினியா வாழ்வதல்லால் பார்வேந்தர் தாமெனினும்
நத்தி விலைமகளா நாங்கள்குடி போவதில்லை.
பொன்னடியைப் போற்றுகின்றேன், போய்வருவீர்.தோழியரும்
90

என்னைவிட்டுப் போயினரே. என்செய்கேன்?” என்றுநீ
நெஞ்சங் கலக்கமெய்தி நிற்கையிலே, வேந்தன்மகன்
மிஞ்சுநின்றன் காதல் விழிக்குறிப்பி னாலறிந்தே,
பக்கத்தில் வந்து பளிச்சென் றுனது கன்னஞ்
செக்கச் சிவக்க முத்தமிட்டான். சினங்காட்டி
95

நீவிலகிச் சென்றாய் -- நெறியேது காமியர்க்கே? --
தாவிநின்னை வந்து தழுவினான் மார்பிறுக.
“நின்னையன்றி ஓர்பெண் நிலத்திலுண்டோ என்றனுக்கே?
பொன்னே, ஒளிர்மணியே, புத்தமுதே, இன்பமே,
நீயே மனையாட்டி, நீயே அரசாணி,
100

நீயே துணையெனக்கு, நீயே குலதெய்வம்.
நின்னையன்றிப் பெண்ணை நினைப்பேனோ? வீணிலே
என்னைநீ ஐயுறுதல் ஏதுக்காம்? இப்பொழுதே
நின்மனைக்குச் சென்றிடுவோம்; நின்வீட்டி லுள்ளோர்பால்
என்மனத்தைச் சொல்வேன், எனது நிலையுரைப்பேன்,
105

வேத நெறியில் விவாகமுனைச் செய்துகொள்வேன்,
மாதரசே” என்று வலக்கைதட்டி வாக்களித்தான்.
பூரிப்புக் கொண்டாய்; புளகம்நீ எய்திவிட்டாய்.
வாரிப் பெருந்திரைபோல் வந்த மகிழ்ச்சியிலே
நாணந் தவிர்த்தாய்; நனவே தவிர்ந்தவளாய்,
110

காணத் தெவிட்டாதோர் இன்பக் கனவினிலே
சேர்ந்துவிட்டாய். மன்னவன்றன் திண்டோளை நீயுவகை
ஆர்ந்து தழுவி அவனிதழில் தேன்பருகச்
சிந்தைகொண்டாய். வேந்தன்மகன், தேனில்விழும்  வண்டினைப்போல்,
விந்தையுறு காந்தமிசை வீழும் இரும்பினைப்போல்,
115

ஆவலுடன் நின்னை யறத்தழுவி, ஆங்குனது
கோவை யிதழ்பருகிக் கொண்டிருக்கும் வேளையிலே, --
சற்றுமுன்னே ஊரினின்று தான்வந் திறங்கியவன்,
மற்றுநீ வீட்டைவிட்டு மாதருடன் காட்டினிலே
கூத்தினுக்குச் சென்றதனைக் கேட்டுக் குதூகலமாய
120

ஆத்திரந்தான் மிஞ்சிநின்னை ஆங்கெய்திக் காணவந்தோன் --
நெட்டைக் குரங்கன் நெருங்கிவந்து பார்த்துவிட்டான்.
“பட்டப் பகலிலே! பாவிமகள் செய்தியைப்பார்!
கண்ணாலங் கூட இன்னுங் கட்டி முடியவில்லை.
மண்ணாக்கி விட்டாள்! என் மானந் தொலைத்து விட்டாள்!
125

‘நிச்சய தாம்பூலம்’ நிலையா நடந்திருக்கப்
பிச்சைச் சிறுக்கிசெய்த பேதகத்தைப் பார்த்தாயோ!”
என்று மனதில் எழுகின்ற தீயுடனே
நின்று கலங்கினான் நெட்டைக் குரங்கனங்கே.
மாப்பிளைதான் ஊருக்கு வந்ததையும், பெண்குயிலி
130

தோப்பிலே தானுந்தன் தோழிகளு மாச்சென்று
பாடி விளையாடும் பண்புகேட் டேகுரங்கன்
ஓடி யிருப்பதோர் உண்மையையும் மாடனிடம்
யாரோ உரைத்துவிட்டார்; ஈரிரண்டு பாய்ச்சலிலே
நீரோடும் மேனி நெருப்போடுங் கண்ணுடனே
135

மாடனங்கு வந்துநின்றான். மற்றிதனைத் தேன்மலையின்
வேடர்கோன் மைந்தன் விழிகொண்டு பார்க்கவில்லை.
நெட்டைக் குரங்கனங்கு நீண்ட மரம்போலே
எட்டிநிற்குஞ் செய்தி இவன்பார்க்க நேரமில்லை.
அன்னியனைப் பெண்குயிலி ஆர்ந்திருக்குஞ் செய்தியொன்று
140

தன்னையே இவ்விருவர் தாங்கண்டார், வேறறியார்.
மாடனதைத் தான்கண்டான், மற்றவனும் அங்ஙனமே.
மாடன் வெறிகொண்டான், மற்றவனும் அவ்வாறே.
காவலன்றன் மைந்தனுமக் கன்னிகையும் தானுமங்கு
தேவ சுகங்கொண்டு விழியே திறக்கவில்லை.
145

ஆவிக் கலப்பின் அமுத சுகந்தனிலே
மேவியங்கு மூடி யிருந்த விழிநான்கு.
ஆங்கவற்றைக் கண்டமையால் ஆவியிலே தீப்பற்றி
ஓங்கும் பொறிகள் உதிர்க்கும் விழிநான்கு.
மாடனுந்தன் வாளுருவி மன்னவனைக் கொன்றிடவே
150

ஓடிவந்தான்; நெட்டைக் குரங்கனும்வாளோங்கி வந்தான்;
வெட்டிரண்டு வீழ்ந்தனகாண் வேந்தன் முதுகினிலே.
சட்டெனவே மன்னவனும் தான்திரும்பி வாளுருவி
வீச்சிரண்டில் ஆங்கவரை வீழ்த்தினான்; வீழ்ந்தவர்தாம்
பேச்சிழந்தே அங்கு பிணமாக் கிடந்துவிட்டார்.
155

மன்னவனும் சோர்வெய்தி மண்மேல் விழுந்து விட்டான்.
பின்னவனை நீயும் பெருந்துயர்கொண் டேமடியில்
வாரி யெடுத்துவைத்து வாய்புலம்பக் கண்ணிரண்டும்
மாரி பொழிய மனமிழந்து நிற்கையிலே,
கண்ணை விழித்துனது காவலனும் கூறுகின்றான்:
160

“பெண்ணே, இனிநான் பிழைத்திடேன்; சில்கணத்தே
ஆவி துறப்பேன். அழுதோர் பயனில்லை.
சாவிலே துன்பமில்லை; தையலே, இன்னமும் நாம்
பூமியிலே தோன்றிடுவோம். பொன்னே, நினைக்கண்டு
காமுறுவேன்; நின்னைக் கலந்தினிது வாழ்ந்திடுவேன்;
165

இன்னும் பிறவியுண்டு. மாதரசே, இன்பமுண்டு
நின்னுடனே வாழ்வனினி நேரும் பிறப்பினிலே”
என்றுசொல்லிக் கண்மூடி, இன்பமுறு புன்னகைதான்
நின்று முகத்தே நிலவுதர, மாண்டனன்காண்.
மாடனிங்கு செய்ததோர் மாயத்தால் இப்பொழுது
170

பீடையுறு புள்வடிவம் பேதையுனக் கெய்தியது
. வாழிநின்றன் மன்னவனும் தொண்டை வளநாட்டில்
ஆழிக் கரையின் அருகேயோர் பட்டினத்தில்
மானிடனாத் தோன்றி வளருகின்றான். நின்னையொரு
கானிடத்தே காண்பான். கனிந்துநீ பாடுநல்ல
175

பாட்டினைத்தான் கேட்பான். பழவினையின் கட்டினால்
மீட்டுநின்மேற் காதல்கொள்வான், மென்குயிலே’ என்றந்தத
தென்பொதியை மாமுனிவர் செப்பினார். ‘சாமீ,
குயிலுருவங் கொண்டேன்யான், கோமானோ மேன்மை
பயிலு மனிதவுருப் பற்றிநின்றான். எம்முள்ளே
180

காதலிசைந் தாலுங் கடிமணந்தான் கூடாதாம்.
சாதற் பொழுதிலே தார்வேந்தன் கூறியசொல்
பொய்யாய் முடியாதோ?’ என்றிசைத்தேன் புன்னகையில்
ஐயர் உரைப்பார்: -- ‘அடி பேதாய், இப்பிறவி
தன்னிலும்நீ விந்தகிரிச் சார்பினிலோர் வேடனுக்குக்
185

கன்னியெனத் தான்பிறந்தாய். கர்ம வசத்தினால்,
மாடன் குரங்கன் இருவருமே வன்பேயாக்
காடுமலை சுற்றி வருகையிலே கண்டுகொண்டார்
நின்னையங்கே. இப்பிறப்பில் நீயும் பழமைபோல்
மன்னனையே சேர்வையென்று தாஞ்சூழ்ந்து மற்றவரும்
190

நின்னைக் குயிலாக்கி நீசெல்லுந் திக்கி லெலாம்
நின்னுடனே சுற்றுகின்றார். நீயிதனைத் தேர்கிலையோ?’
என்றார். ‘விதியே! இறந்தவர்தாம் வாழ்வாரை
நின்று துயருறுத்தல் நீதியோ? பேய்களெனைப்
பேதைப் படுத்திப் பிறப்பை மறப்புறுத்தி
195

வாதைப் படுத்தி வருமாயில், யானெனது
காதலனைக் காணுங்கால், காய்சினத்தால் ஏதேனும்
தீதிழைத்தால் என்செய்வேன்? தேவரே. மற்றிதற்கோர்
மாற்றிலையோ?’ என்று மறுகிநான் கேட்கையிலே,
தேற்றமுறு மாமுனிவர் செப்புகின்றார்: -- ‘பெண்குயிலே,
200

தாண்டைவள நாட்டிலோர் சோலையிலே வேந்தன் மகன்
கண்டுனது பாட்டில் கருத்திளகிக் காதல்கொண்டு
நேச மிகுதியுற்று நிற்கையிலே, பேயிரண்டும்
மோசம் மிகுந்த முழுமாயச் செய்கைபல
செய்துபல பொய்த்தோற்றங் காட்டித் திறல்வேந்தன்
205

ஐயமுறச் செய்துவிடும், ஆங்கவனும் நின்றனையே
வஞ்சகியென் றெண்ணி மதிமருண்டு நின்மீது
வெஞ்சினந்தான் எய்திநினை விட்டுவிட நிச்சயிப்பான்.
பிந்தி விளைவதெல்லாம் பின்னே நீ கண்டு கொள்வாய்,
சந்திஜபம் செய்யும் சமயமாய் விட்ட’தென்றே
210

காற்றில் மறைந்துசென்றார் மாமுனிவர். காதலரே,
மாற்றி உரைக்கவில்லை. மாமுனிவர் சொன்னதெல்லாம்
அப்படியே சொல்லிவிட்டேன். ஐயோ! திருவுளத்தில்
எப்படி நீர் கொள்வீரோ? யானறியேன். ஆரியரே,
காத லருள்புரிவீர். காதலில்லை யென்றிடிலோ
215

சாத லருளித் தமதுகையால் கொன்றிடுவீர்!”
என்று குயிலும் எனதுகையில் வீழ்ந்ததுகாண்.
கொன்றுவிட மனந்தான் கொள்ளுமோ? பெண்ணென்றால்,
பேயு மிரங்காதோ? பேய்கள் இரக்கமின்றி
மாயமிழைத் தாலதனை மானிடனுங் கொள்ளுவதோ?
220

காதலிலே ஐயம் கலந்தாலும் நிற்பதுண்டோ?
மாதரன்பு கூறில் மனமிளகார் இங்குளரோ?
அன்புடனே யானும் அருங்குயிலைக் கைக்கொண்டு
முன்புவைத்து நோக்கியபின் மூண்டுவரும் இன்பவெறி்
கொண்டதனை முத்தமிட்டேன். கோகிலத்தைக் காணவில்லை.
225

விண்டுரைக்க மாட்டாத விந்தையடா! விந்தையடா!
ஆசைக் கடலின் அமுதடா! அற்புதத்தின்
தேசமடா! பெண்மைதான் தெய்விகமாம் காட்சியடா!
பெண்ணொருத்தி அங்குநின்றாள்; பேருவகை கொண்டுதான்
கண்ணெடுக்கா தென்னைக் கணப்பொழுது நோக்கினாள்;
230

சற்றே தலைகுனிந்தாள். சாமீ! இவளழகை
எற்றே தமிழில் இசைத்திடுவேன்? கண்ணிரண்டும்
ஆளை விழுங்கும் அதிசயத்தைக் கூறுவனோ?
மீள விழியில் மிதந்த கவிதையெலாம்
சொல்லில் அகப்படுமோ? தூயசுடர் முத்தையொப்பாம்
235

பல்லில் கனியிதழில் பாய்ந்த நிலவினையான்
என்றும் மறத்தல் இயலுமோ? பாரின்மிசை
நின்றதொரு மின்கொடிபோல் நேர்ந்தமணிப் பெண்ணரசின்
மேனி நலத்தினையும் வெட்டினையும் கட்டினையும்
தேனி லினியாள் திருத்த நிலையினையும்
240

மற்றவர்க்குச் சொல்ல வசமாமோ? ஓர் வார்த்தை,
கற்றவர்க்குச் சொல்வேன். கவிதைக் கனிபிழிந்த
சாற்றினிலே, பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம்
ஏற்றி, அதனோடே இன்னமுதைத் தான்கலந்து,
காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால்
245

மாதவனின் மேனி வகுத்தான் பிரமனென்பேன்.
பெண்ணவளைக் கண்டு பெருங்களிகொண் டாங்ஙனே
நண்ணித் தழுவி நறுங்கள் ளிதழினையே
முத்தமிட்டு முத்தமிட்டு மோகப் பெருமயக்கில்
சித்தம் மயங்கிச் சிலபோழ் திருந்தபின்னே,
250

பக்கத் திருந்தமணிப் பாவையுடன் சோலையெலாம்
ஒக்க மறைந்திடலும், ஓஹோ! எனக்கதறி
வீழ்ந்தேன். பிறகு விழிதிறந்து பார்க்கையிலே
சூழ்ந்திருக்கும் பண்டைச் சுவடி, எழுதுகோல்,
பத்திரிக்கைக் கூட்டம், பழம்பாய் -- வரிசையெல்லாம் --
255

ஒத்திருக்க ‘நாம்வீட்டில் உள்ளோம்’ எனவுணர்ந்தேன்.
சோலை, குயில், காதல், சொன்னகதை யத்தனையும்,
மாலை யழகின் மயக்கத்தால் உள்ளத்தே
தோன்றியதோர் கற்பனையின் சூழ்ச்சியென்றே கண்டுகொண்டேன்.
ஆன்ற தமிழ்ப்புலவீர், கற்பனையே யானாலும்,
260

வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க
யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ?

கண்ணன் பாட்டு

முதற் பதிப்பின் முகவுரை

இந்தச் சிறிய நூலுக்கு ஒரு பெரிய முகவுரை எழுத யான்
விரும்பவில்லை. சில வார்த்தைகள் மட்டும் கூறுகின்றேன்.இதன்
ஆசிரியர் ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதியாரைத்
தமிழ்நாட்டார்அறிவார்கள். ஆனால், அவர் பெருமையை உள்ளபடி
அறிந்தவர்கள் மிகமிகச்சிலரேயாவர். ஸ்ரீமான் பாரதியார் ஒரு பெரிய
மேதாவி; மகாபண்டிதர்; தெய்விகப்புலவர்; ஜீவன் முக்தர். இவர்
தமிழ்நாட்டு ‘ரவீந்திர நாதர்’; இவர் எனது தமிழ்நாட்டின்
தவப்பயன்.பாரதியாருக்குக் கண்ணபிரான் மீதுள்ள அதிதீவிர
பக்திகாரணமாக இந்நூலிலுள்ளபாடல்கள் வெளியாயின. இவை
தமிழர்களுக்கு நல்விருந்தாகும்.பாரதியார் பாடல்களின் பெருமையைப்
பற்றி யான் விரித்துக்கூறுவதென்றால், இந்த முகவுரை அளவுகடந்து
பெரிதாய்விடும். ஒரு வார்த்தைமட்டும் கூறுகின்றேன். இந்த ஆசிரியன்
காலத்திற்குப்பின், எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப்பின், இவர்
பாடல்களைத் தமிழ்நாட்டு மாதர்களும் புருஷர்களும் மிகுந்த
இன்பத்துடன் படித்துக் களிப்படையும் காட்சியை யான்
இப்பொழுதே காண்கின்றேன்.

இந்நூல் வாழ்க! என்னவர் வாழ்க!! எந்தாய் வாழ்க!!!
-- நெல்லையப்ப பிள்ளை

இரண்டாம் பதிப்பின் முன்னுரை


நம் காலத்துத் தமிழ்க் கவிகளுள் பிரதம ஸ்தானத்தை வகிக்கும்
ஸ்ரீமான் சுப்ரமண்ய பாரதியின் நூல்களுக்கு முன்னுரை
வேண்டுவதேயில்லை. இருப்பினும், பாயிரமல்லது பனுவலன்றே
என்னும் முதுமொழியை நினைத்தோ அல்லது வேறு என்ன
எண்ணியோ, பதிப்பாசிரியர் இக் கண்ணன் பாட்டின் இரண்டாம்
பதிப்புக்கு என்னை ஒரு முன்னுரை எழுதித்தர வேண்டுமெனக்
கேட்டார்; சிறிதளவேனும் சாத்தியமாயிருக்கிற ஒரு காரியத்தை
நட்புரிமை பூண்டோ செய்யும்படி வேண்டினால் மறுத்தல்
அழகன்று என நினைத்துச் சம்மதித்தேன்.

பாரதநாட்டின் குலதெய்வமாகிவிட்ட கண்ணனுக்குப் பாமாலை
சூட்டாத கவிகள் அருமை. தன்னை நெடுநாள்களாக மறந்திருந்த
பாரதநாடு திடீரென விழித்துக்கொண்டதும், அதன் எதிரே முதலில்
தோன்றிய ஒளி, கீதாசாஸ்திரத்தைக் கூறிப் பார்த்தனுடைய ரதத்தை
வெற்றிபெற ஓட்டிய கண்ணபிரானுடைய உருவமே. அந்த
உருவமானது நமது கவியின் இருதயத்திலும் எழுந்து அவருடைய
கவிதைக்கு ஒரு சோபையைக் கொடுத்தது.

<சொம்>பு{ இரண்டாம் பதிப்பு 1919இல் வெளி வந்தது.}

<சொம்>
பத்து வருஷங்களுக்குமுன் அவர் பதிப்பித்த ஜன்ம பூமியிலேயே
ஸ்ரீ கிருஷ்ண ஸ்தோத்திரம் என்று இரண்டு செய்யுள்கள்
காணப்படுகின்றன. ஆனால், பிற்பட்டுத்தான் கண்ணனுடைய
செயல்களும் திருவிளையாடல்களும் அவர் மனத்தைப்
பூரணமாக ஆகருஷித்தன. இவ் ஆகருஷணத்திற்கு
நாலாயிரப் பிரபந்தத்துள் பெரியாழ்வார் அருளிச் செய்த
திருப்பாசுரங்களின் அனுசந்தானம் முக்கிய காரணமாக
இருந்திருக்கிறது. இக்கண்ணன் பாட்டானது பாவ விஷயத்தில்
அப்பாசுரங்களின் வழியையே தழுவியதாக இருக்கிறது. இஷ்ட
தெய்வத்தைப் பல பாவங்களால் வழிபடலாகும் என்று நமது
பக்திசாஸ்திரங்கள் கூறுகின்றன. நமது ஆசிரியரும் இதை
அனுசரித்துக் கண்ணனைத் தாயாகவும், தந்தையாகவும்,
எஜமானனாகவும், குருவாகவும், தோழனாகவும், நாயகியாகவும்,
நாயகனாகவும் பாவித்துப் பாடுகிறார்.


இவற்றுள், நாயக நாயகி பாவத்தைப்பற்றி இங்குச்
சிலமொழிகள் கூறாது விடமுடியவில்லை. இப் பாவத்தால்
பகவானை வழிபடும்முறை தொன்றுதொட்டு பக்தர்களாலும்
கவிகளாலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ரோமன்
கத்தோலிக்மதத்திலேகூட அடியார்வர்க்கத்தை நாயகியாகவும்
கிறிஸ்துவை நாயகனாகவும் பாவித்து எழுதிய ஸ்தோத்திரங்கள்
பல உள. நமது பாகவதத்தில் கோபிகைகளின்
உபாக்கியானங்களெல்லாம் இப்பாவத்தைத் தழுவி
எழுதப்பட்டுள்ளனவே. மகாபக்திமதியான மீராபாயி
உலகத்திலுள்ள ஜீவகோடிகள் அனைத்தும் ஸ்திரீப்பிராயம்
என்றும் பகவான் ஒருவனே புருஷன் என்றும் பாவித்துப்
பக்திசெய்திருக்கிறார். பரமஹம்ச ஸ்ரீ ராமகிருஷ்ண தேவரும்
தம்முடைய அனுபவங்களுள் நாயகி அனுபவத்தையும்
அனுபவிக்க எண்ணி, சேகி தரித்துக்கொண்டு, ராதை
என்கிற பாவத்தால் கண்ணனை வழிபட்டார் என்று
சொல்லப்படுகிறது. திருக்கோவையாரையும்,
ராமலிங்கசுவாமிகளின் திருவருட்பாவையும்
அனுபவித்த தமிழருக்கு இவ்விதம் வழிபடும்முறை
புதிதாகப் படாது. ஆனால், இந்தப் பாவத்தை
ஆளுவது கத்தியின் கூர்ப்பக்கத்தின்மீது நடப்பதைப்போன்ற
கஷ்டமான காரியம். ஒரு வரம்பு இருக்கிறது; அதற்கு
இப்புறம் அப்புறம் போய்விட்டால், அசந்தர்ப்பமாகிவிடும்.
ஸ்ரீ பாகவதத்திலுகூட கோபிகா உபாக்கியானங்களில்
சுகபகவான் இவ்வரம்பை அங்கங்கே கடந்துவிட்டிருக்கிறார்
என்பது எனது

கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்,
கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்
1

என்று தொடங்கும் திருவாய் மொழிகளையும்,
கருப்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ?
2

பு{குறிப்பு: 1. திருவாய்மொழி, 5, 6, 1.
2. நாச்சியார் திருமொழி, 7, 1.}

என்றும் தொடங்கும் ஆண்டாளுடைய பாசுரங்களையும்போலச்
செயிரின்றி இப் பாவத்தைப் பாடுவது அநேகமாய் அசாத்தியம்.
நமது கவியும் இப் பாவத்தை விரிக்கையில் பரபக்தியைவிடச்
சாரீரமான காதலையே அதிகமாக வர்ணித்திருக்கிறார். ஆனால்,
சுகப்பிரம்மமே நிறுத்தமுடியாததான தராசுமுனையை நம்
ஆசிரியர் நிறுத்தவில்லை என்று நாம்குறை கூறலாமா?
இந்தக் கீர்த்தனங்களைப் பரபக்திக்குப் பேரிலக்கியமாகக்
கொள்ளவேண்டுவதில்லை. ஆசிரியர் இந் நூலில் கவி
என்கிற ஹோதாவில்தான் நம்மிடமை வருகிறார் என
நினைக்கவேண்டும். கவிதாரீதியாகப் பார்க்கும்போது,
இக கீர்த்தனங்களுள் பெரும்பாலான வையிலுள்ள சுவை
தேனினும் இனிதாயிருக்கிறது. இன்னொன்று: கவிதையழகை
மாத்திரம் அனுபவித்துவிட்டு, இந்நூலின் பண்ணழகை
மறந்துவிடக்கூடாது. இதிலுள்ள பாட்டுக்களிற் பெரும்பாலவை
தாளத்தோடு பாடுவதற்காகவே எழுதப்பட்டவையாயிருக்கின்றன.
கடற்கரையில், சாந்திமயமான சாயங்கால வேளையில்,
உலகனைத்தையும் மோஹவயப்படுத்தி நீலக் கடலையும்
பாற்கடலாக்கும் நிலவொளியில், புதிதாகப் புனைந்த
கீர்த்தனங்களைக் கற்பனா கர்வத்தோடும் சிருஷ்டி
உற்சாகத்தோடும் ஆசிரியன் தன்னுடைய கம்பீரமான
குரலில் பாடினதைக் கேட்ட ஒவ்வொருவரும் இந்
நூலிலுள்ள பாட்டுக்களை மாணிக்கங்களாக மதிப்பர்.

இந் நூலைத் தமிழுலகம் ஆதரித்துத்தான் இரண்டாவது
பதிப்பு வெளிவருகிறது. ஆனால், ஹரீந்திரநாத
சட்டோபாத்யாயர் எழுதிய ஆங்கிலக் கீர்த்தனங்களின்
விலை மூன்று ரூபாயாக இருக்க, அளவில் அந்நூலில்
குறையாததும், சுவையில் அதற்கு இணையாக இருப்பதுமான
இந்நூலின் முதற் பதிப்புக்குக் காகிதவிலை ஏறிவிற்ற
காலத்தில் பதிப்பாசிரியர் விலை கால்ரூபாயாகக் குறிக்க
வேண்டியிருந்தது என நினைக்கும்போது, நாட்டில்
தமிழபிமானம் வெளிப்படையாக விளங்கவில்லை
யென்றாவது ஒப்புக்கொள்ளவேண்டும். முன் காலத்தில்,
ஆசிரியர்களுக்கு அரசர்கள் ஏராளமான பொருள்
உதவிசெய்து, அவர்கள் மனத்தைச் சிறிய விசாரங்கள்
பீடிக்காமல் காத்துவந்து, அவர்களுடைய ஆற்றல்
நாளுக்குநாள் அதிகரிக்கும்படி செய்துவந்தார்கள்.
தற்காலத்தில் கல்வி யபிமான முள்ள பொதுஜனங்கள்தாம்
அக்காலத்து அரசரின் ஸ்தானத்தை வகிக்கிறார்கள். இவர்கள்
தங்கள் அபிமானத்தை, விலையைப் பொருட்படுத்தாமல்
நூல்களின் யோக்கியதையைக் கருதி ஆதரித்துத்தான்
காட்டமுடியும். நமது ஆசிரியரின் நூல்களை நம்
நாட்டவர் சரிவர ஆதரிக்காததனாலே,

“சுற்றி நில்லாதே போ, பகையே: --
துள்ளி வருகுது வேல்”
1
கண்ணன் பாட்டு
 
முதற் பதிப்பின் முகவுரை
இந்தச் சிறிய நூலுக்கு ஒரு பெரிய முகவுரை எழுத யான்
விரும்பவில்லை. சில வார்த்தைகள் மட்டும் கூறுகின்றேன்.இதன்
ஆசிரியர் ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதியாரைத்
தமிழ்நாட்டார்அறிவார்கள். ஆனால், அவர் பெருமையை உள்ளபடி
அறிந்தவர்கள் மிகமிகச்சிலரேயாவர். ஸ்ரீமான் பாரதியார் ஒரு பெரிய
மேதாவி; மகாபண்டிதர்; தெய்விகப்புலவர்; ஜீவன் முக்தர். இவர்
தமிழ்நாட்டு ‘ரவீந்திர நாதர்’; இவர் எனது தமிழ்நாட்டின்
தவப்பயன்.பாரதியாருக்குக் கண்ணபிரான் மீதுள்ள அதிதீவிர
பக்திகாரணமாக இந்நூலிலுள்ளபாடல்கள் வெளியாயின. இவை
தமிழர்களுக்கு நல்விருந்தாகும்.பாரதியார் பாடல்களின் பெருமையைப்
பற்றி யான் விரித்துக்கூறுவதென்றால், இந்த முகவுரை அளவுகடந்து
பெரிதாய்விடும். ஒரு வார்த்தைமட்டும் கூறுகின்றேன். இந்த ஆசிரியன்
காலத்திற்குப்பின், எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப்பின், இவர்
பாடல்களைத் தமிழ்நாட்டு மாதர்களும் புருஷர்களும் மிகுந்த
இன்பத்துடன் படித்துக் களிப்படையும் காட்சியை யான்
இப்பொழுதே காண்கின்றேன்.
 
இந்நூல் வாழ்க! என்னவர் வாழ்க!! எந்தாய் வாழ்க!!!
-- நெல்லையப்ப பிள்ளை  
இரண்டாம் பதிப்பின் முன்னுரை  

நம் காலத்துத் தமிழ்க் கவிகளுள் பிரதம ஸ்தானத்தை வகிக்கும்
ஸ்ரீமான் சுப்ரமண்ய பாரதியின் நூல்களுக்கு முன்னுரை
வேண்டுவதேயில்லை. இருப்பினும், பாயிரமல்லது பனுவலன்றே
என்னும் முதுமொழியை நினைத்தோ அல்லது வேறு என்ன
எண்ணியோ, பதிப்பாசிரியர் இக் கண்ணன் பாட்டின் இரண்டாம்
பதிப்புக்கு என்னை ஒரு முன்னுரை எழுதித்தர வேண்டுமெனக்
கேட்டார்; சிறிதளவேனும் சாத்தியமாயிருக்கிற ஒரு காரியத்தை
நட்புரிமை பூண்டோ செய்யும்படி வேண்டினால் மறுத்தல்
அழகன்று என நினைத்துச் சம்மதித்தேன்.

பாரதநாட்டின் குலதெய்வமாகிவிட்ட கண்ணனுக்குப் பாமாலை
சூட்டாத கவிகள் அருமை. தன்னை நெடுநாள்களாக மறந்திருந்த
பாரதநாடு திடீரென விழித்துக்கொண்டதும், அதன் எதிரே முதலில்
தோன்றிய ஒளி, கீதாசாஸ்திரத்தைக் கூறிப் பார்த்தனுடைய ரதத்தை
வெற்றிபெற ஓட்டிய கண்ணபிரானுடைய உருவமே. அந்த
உருவமானது நமது கவியின் இருதயத்திலும் எழுந்து அவருடைய
கவிதைக்கு ஒரு சோபையைக் கொடுத்தது.

<சொம்>பு{ இரண்டாம் பதிப்பு 1919இல் வெளி வந்தது.}

<சொம்>
பத்து வருஷங்களுக்குமுன் அவர் பதிப்பித்த ஜன்ம பூமியிலேயே
ஸ்ரீ கிருஷ்ண ஸ்தோத்திரம் என்று இரண்டு செய்யுள்கள்
காணப்படுகின்றன. ஆனால், பிற்பட்டுத்தான் கண்ணனுடைய
செயல்களும் திருவிளையாடல்களும் அவர் மனத்தைப்
பூரணமாக ஆகருஷித்தன. இவ் ஆகருஷணத்திற்கு
நாலாயிரப் பிரபந்தத்துள் பெரியாழ்வார் அருளிச் செய்த
திருப்பாசுரங்களின் அனுசந்தானம் முக்கிய காரணமாக
இருந்திருக்கிறது. இக்கண்ணன் பாட்டானது பாவ விஷயத்தில்
அப்பாசுரங்களின் வழியையே தழுவியதாக இருக்கிறது. இஷ்ட
தெய்வத்தைப் பல பாவங்களால் வழிபடலாகும் என்று நமது
பக்திசாஸ்திரங்கள் கூறுகின்றன. நமது ஆசிரியரும் இதை
அனுசரித்துக் கண்ணனைத் தாயாகவும், தந்தையாகவும்,
எஜமானனாகவும், குருவாகவும், தோழனாகவும், நாயகியாகவும்,
நாயகனாகவும் பாவித்துப் பாடுகிறார்.


இவற்றுள், நாயக நாயகி பாவத்தைப்பற்றி இங்குச்
சிலமொழிகள் கூறாது விடமுடியவில்லை. இப் பாவத்தால்
பகவானை வழிபடும்முறை தொன்றுதொட்டு பக்தர்களாலும்
கவிகளாலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ரோமன்
கத்தோலிக்மதத்திலேகூட அடியார்வர்க்கத்தை நாயகியாகவும்
கிறிஸ்துவை நாயகனாகவும் பாவித்து எழுதிய ஸ்தோத்திரங்கள்
பல உள. நமது பாகவதத்தில் கோபிகைகளின்
உபாக்கியானங்களெல்லாம் இப்பாவத்தைத் தழுவி
எழுதப்பட்டுள்ளனவே. மகாபக்திமதியான மீராபாயி
உலகத்திலுள்ள ஜீவகோடிகள் அனைத்தும் ஸ்திரீப்பிராயம்
என்றும் பகவான் ஒருவனே புருஷன் என்றும் பாவித்துப்
பக்திசெய்திருக்கிறார். பரமஹம்ச ஸ்ரீ ராமகிருஷ்ண தேவரும்
தம்முடைய அனுபவங்களுள் நாயகி அனுபவத்தையும்
அனுபவிக்க எண்ணி, சேகி தரித்துக்கொண்டு, ராதை
என்கிற பாவத்தால் கண்ணனை வழிபட்டார் என்று
சொல்லப்படுகிறது. திருக்கோவையாரையும்,
ராமலிங்கசுவாமிகளின் திருவருட்பாவையும்
அனுபவித்த தமிழருக்கு இவ்விதம் வழிபடும்முறை
புதிதாகப் படாது. ஆனால், இந்தப் பாவத்தை
ஆளுவது கத்தியின் கூர்ப்பக்கத்தின்மீது நடப்பதைப்போன்ற
கஷ்டமான காரியம். ஒரு வரம்பு இருக்கிறது; அதற்கு
இப்புறம் அப்புறம் போய்விட்டால், அசந்தர்ப்பமாகிவிடும்.
ஸ்ரீ பாகவதத்திலுகூட கோபிகா உபாக்கியானங்களில்
சுகபகவான் இவ்வரம்பை அங்கங்கே கடந்துவிட்டிருக்கிறார்
என்பது எனது தாழ்ந்த அபிப்பிராயம்.
 
கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்,
கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்
1
   
என்று தொடங்கும் திருவாய் மொழிகளையும்,
கருப்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ?
2
   
பு{குறிப்பு: 1. திருவாய்மொழி, 5, 6, 1.
2. நாச்சியார் திருமொழி, 7, 1.}
 
என்றும் தொடங்கும் ஆண்டாளுடைய பாசுரங்களையும்போலச்
செயிரின்றி இப் பாவத்தைப் பாடுவது அநேகமாய் அசாத்தியம்.
நமது கவியும் இப் பாவத்தை விரிக்கையில் பரபக்தியைவிடச்
சாரீரமான காதலையே அதிகமாக வர்ணித்திருக்கிறார். ஆனால்,
சுகப்பிரம்மமே நிறுத்தமுடியாததான தராசுமுனையை நம்
ஆசிரியர் நிறுத்தவில்லை என்று நாம்குறை கூறலாமா?
இந்தக் கீர்த்தனங்களைப் பரபக்திக்குப் பேரிலக்கியமாகக்
கொள்ளவேண்டுவதில்லை. ஆசிரியர் இந் நூலில் கவி
என்கிற ஹோதாவில்தான் நம்மிடமை வருகிறார் என
நினைக்கவேண்டும். கவிதாரீதியாகப் பார்க்கும்போது,
இக கீர்த்தனங்களுள் பெரும்பாலான வையிலுள்ள சுவை
தேனினும் இனிதாயிருக்கிறது. இன்னொன்று: கவிதையழகை
மாத்திரம் அனுபவித்துவிட்டு, இந்நூலின் பண்ணழகை
மறந்துவிடக்கூடாது. இதிலுள்ள பாட்டுக்களிற் பெரும்பாலவை
தாளத்தோடு பாடுவதற்காகவே எழுதப்பட்டவையாயிருக்கின்றன.
கடற்கரையில், சாந்திமயமான சாயங்கால வேளையில்,
உலகனைத்தையும் மோஹவயப்படுத்தி நீலக் கடலையும்
பாற்கடலாக்கும் நிலவொளியில், புதிதாகப் புனைந்த
கீர்த்தனங்களைக் கற்பனா கர்வத்தோடும் சிருஷ்டி
உற்சாகத்தோடும் ஆசிரியன் தன்னுடைய கம்பீரமான
குரலில் பாடினதைக் கேட்ட ஒவ்வொருவரும் இந்
நூலிலுள்ள பாட்டுக்களை மாணிக்கங்களாக மதிப்பர்.
 
இந் நூலைத் தமிழுலகம் ஆதரித்துத்தான் இரண்டாவது
பதிப்பு வெளிவருகிறது. ஆனால், ஹரீந்திரநாத
சட்டோபாத்யாயர் எழுதிய ஆங்கிலக் கீர்த்தனங்களின்
விலை மூன்று ரூபாயாக இருக்க, அளவில் அந்நூலில்
குறையாததும், சுவையில் அதற்கு இணையாக இருப்பதுமான
இந்நூலின் முதற் பதிப்புக்குக் காகிதவிலை ஏறிவிற்ற
காலத்தில் பதிப்பாசிரியர் விலை கால்ரூபாயாகக் குறிக்க
வேண்டியிருந்தது என நினைக்கும்போது, நாட்டில்
தமிழபிமானம் வெளிப்படையாக விளங்கவில்லை
யென்றாவது ஒப்புக்கொள்ளவேண்டும். முன் காலத்தில்,
ஆசிரியர்களுக்கு அரசர்கள் ஏராளமான பொருள்
உதவிசெய்து, அவர்கள் மனத்தைச் சிறிய விசாரங்கள்
பீடிக்காமல் காத்துவந்து, அவர்களுடைய ஆற்றல்
நாளுக்குநாள் அதிகரிக்கும்படி செய்துவந்தார்கள்.
தற்காலத்தில் கல்வி யபிமான முள்ள பொதுஜனங்கள்தாம்
அக்காலத்து அரசரின் ஸ்தானத்தை வகிக்கிறார்கள். இவர்கள்
தங்கள் அபிமானத்தை, விலையைப் பொருட்படுத்தாமல்
நூல்களின் யோக்கியதையைக் கருதி ஆதரித்துத்தான்
காட்டமுடியும். நமது ஆசிரியரின் நூல்களை நம்
நாட்டவர் சரிவர ஆதரிக்காததனாலே,
 
“சுற்றி நில்லாதே போ, பகையே: --
துள்ளி வருகுது வேல்”
1
என்றும்,
“கைதனில் வில்லும் உண்டு:
காண்டீவம் அதன் பேர்”
2
\பு{1. தோத்திரப் பாடல்கள், ஆறு துணை, 3. 2. பாஞ்சாலி
சபதத்தின் இரண்டாம் பாகத்தில் அர்ச்சுனன் தன்னுடைய
பராக்கிரமத்தைக் கூறும் செய்யுளில் வருகிறது.} என்றும் உள்ள
அக்ஷர லக்ஷம் பெறுமான பாக்களை எழுதியிருக்கும்
அவருடைய உற்சாகம் குன்றிப்போயிருக்கிறது.
தமிழபிமானிகள் இப்பதிப்பை ஆதரித்து வாங்கி
ஆசிரியனுடைய உற்சாகத்தை உயர்த்தி அவரால்
தமிழில் புதிய இலக்கியங்கள் பிறக்கும்படி செய்வார்கள்
என நம்புகிறேன்.
 
வ.வே. சுப்ரமண்ய ஐயர