தோத்திரப்
பாடல்கள்
கண்ணன் வரவு
|
பல்லவி
|
வருவாய்,
வருவாய், வருவாய் -- கண்ணா
வருவாய், வருவாய், வருவாய். |
சரணங்ள்
|
உருவாய் அறிவில் ஒளிர்வாய் -- கண்ணா
உயிரின் னமுதாய்ப் பொழிவாய் -- கண்ணா
கருவாய் என்னுள் வளர்வாய் -- கண்ணா
கமலத் திருவோ டிணைவாய் -- கண்ணா |
(வருவாய்)
|
1 |
இணைவாய் எனதா வியிலே -- கண்ணா
இதயத் தினிலே யமர்வாய் -- கண்ணா
கணைவா யசுரர் தலைகள் -- சிதறக்
கடையூ ழியிலே படையோ டெழுவாய்! |
(வருவாய்) |
2
|
எழுவாய் கடல்மீ தினிலே -- எழுமோர்
இரவிக் கிணையா உளமீ தினிலே
தொழுவேன் சிவனாம் நினையே -- கண்ணா,
துணையே, அமரர் தொழும்வா னவனே! |
(வருவாய்) |
3
|
|
|
|