தோத்திரப்
பாடல்கள்
கண்ணன் துதி
|
காயிலே புளிப்பதென்னே?
கண்ண பெருமானே! -- நீ
கனியிலே இனிப்பதென்னே?
கண்ண பெருமானே!
நோயிலே படுப்பதென்னே?
கண்ண பெருமானே! -- நீ
நோன்பிலே உயிர்ப்பதென்னே?
கண்ண பெருமானே!
|
1 |
காற்றிலே குளிர்ந்ததென்னே?
கண்ண பெருமானே! -- நீ
கனலிலே சுடுவதென்னே?
கண்ண பெருமானே!
சேற்றிலே குழம்பலென்னே?
கண்ண பெருமானே! -- நீ
திக்கிலே தெளிந்ததென்னே?
கண்ண பெருமானே! |
2 |
ஏற்றிநின்னைத் தொழுவதென்னே?
கண்ண பெருமானே! -- நீ
எளியர் தம்மைக் காப்பதென்னே?
கண்ண பெருமானே!
போற்றினோரைக் காப்பதென்னே?
கண்ண பெருமானே! -- நீ
பொய்யர் தம்மை மாய்ப்பதென்னே?
கண்ண பெருமானே! |
3 |
போற்றி! போற்றி! போற்றி! போற்றி!
கண்ண பெருமானே! -- நீ
பொன்னடி போற்றி நின்றேன்,
கண்ண பெருமானே! |
4 |