கண்ணன் பாட்டு
கண்ணன் -- என் ஆண்டான்
(புன்னாகவராளி -- திஸ்ர ஏகதாளம்.
ரசங்கள்: அத்புதம், கருணை)
|
தஞ்ச முலகினில் எங்கணு மின்றித்
தவித்துத் தடுமாறி,
பஞ்சைப் பறையன் அடிமை புகுந்தேன்,
பார முனக்காண்டே;
ஆண்டே -- பாரமுனக் காண்டே.
|
1
|
துன்பமும்
நோயும் மிடிமையுந் தீர்த்துச்
சுகமருளல் வேண்டும்;
அன்புடன் நின்புகழ் பாடிக் குதித்துநின்
ஆணை வழிநடப்பேன்
ஆண்டே -- ஆணைவழி நடப்பேன்.
|
2
|
சேரி
முழுதும் பறையடித் தேயருட்
சீர்த்திகள்
பாடிடுவேன்;
பேரிகை கொட்டித் திசைக ளதிரநின்
பெயர்
முழக்கிடுவேன்
ஆண்டே
-- பெயர் முழக்கிடுவேன்.
|
3
|
பண்ணைப்
பறையர்தங் கூட்டத்தி லேயிவன்
பாக்கிய
மோங்கிவிட்டான்
கண்ண னடிமை யிவனெனுங் கீர்த்தியில்
காதலுற்
றிங்குவந்தேன்;
ஆண்டே
-- காதலுற் றிங்குவந்தேன்.
|
4
|
காடு கழனிகள்
காத்திடுவேன், நின்றன்
காலிகள் மேய்த்திடுவேன்;
பாடுபடச் சொல்லிப் பார்த்ததன் பின்னரென்
பக்குவஞ் சொல்லாண்டே!
ஆண்டே -- பக்குவஞ் சொல்லாண்டே.
|
5
|
தோட்டங்கள்
கொத்திச் செடிவளர்க்கச் சொல்லிச்
சோதனை போடாண்டே;
காட்டு மழைக்குறி தப்பிச்சொன்னா லெனைக்
கட்டியடி யாண்டே;
ஆண்டே -- கட்டியடி யாண்டே.
|
6
|
பெண்டு குழந்தைகள்
கஞ்சி குடித்துப்
பிழைத்திட வேண்டுமையே!
அண்டை யயலுக்கென் னாலுப காரங்கள்
ஆகிட வேண்டுமையே!
உபகாரங்கள் -- ஆகிட வேண்டுமையே!
|
7
|
மானத்தைக்
காக்கவோர் நாலு முழத்துணி
வாங்கித் தரவேணும்;
தானத்துக்குச் சில வேட்டிகள் வாங்கித்
தரவுங் கடனாண்டே,
சில வேட்டி -- தரவுங் கடனாண்டே.
|
8
|
ஒன்பது வாயிற்
குடிலினைச் சுற்றி
யொருசில பேய்கள்வந்தே
துன்பப் படுத்துது, மந்திரஞ் செய்து
தொலைத்திட வேண்டுமையே!
பகையாவுந் -- தொலைத்திட வேண்டுமையே!
|
9
|
-
பேயும் பிசாசுந்
திருடரு மென்றன்
பெயரினைக் கேட்டளவில்,
வாயுங் கையுங்கட்டி அஞ்சி நடக்க
வழிசெய்ய வேண்டுமையே!
தொல்லைதீரும் -- வழிசெய்ய வேண்டுமையே! |
10 |