காவியங்கள்
: கற்பனையும் கதையும்
|
பிரம ஸ்துதி நொண்டிச்சிந்து
ஓமெனப்
பெரியோர் கள் -- என்றும்
ஓதுவ தாய், வினை மோதுவ தாய்,
தீமைகள் மாய்ப்பது வாய், -- துயர்
தேய்ப்பது வாய், நலம் வாய்ப்பது வாய்,
நாமமும் உருவும் அற்றே -- மனம்
நாடரி தாய்ப்புந்தி தேடரி தாய்,
ஆமெனும் பொருளனைத் தாய், -- வெறும்
அறிவுடன் ஆனந்த இயல்புடைத் தாய். |
1 |
நின்றிடும்
பிரமம் என் பார்; -- அந்த
நிர்மலப் பொருளினை நினைத்திடு வேன்,
நன்றுசெய் தவம்யோ கம் -- சிவ
ஞானமும் பக்தியும் நணுகிட வே,
வென்றிகொள் சிவசக்தி -- எனை
மேவுற வேஇருள் சாவுற வே,
இன்றமிழ் நூலிதுதான் -- புகழ்
ஏய்ந்தினி தாயென்றும் இலகிடவே. |
2 |
-
|