காவியங்கள்
: கற்பனையும் கதையும்
|
திரிதராட்டிரன்
பதில
வேறு
|
திரிதராட் டிரன்செவியில் -- இந்தத்
தீமொழி புகுதலுந் திகைத்து விட்டான்;
‘பெரிதாத் துயர்கொணர்ந் தாய்; -- கொடும்
பேயெனப் பிள்ளைகள் பெற்றுவிட்டேன்;
அரிதாக் குதல்போலே -- அமர்
ஆங்கவ ரொடுபொரல் அவலடம் என்றேன்;
நரிதாக் குதல்போலாம் -- இந்த
நாணமில் செயலினை நாடுவனோ? |
92 |
‘ஆரியர் செய்வாரோ? -- இந்த
ஆண்மை யிலாச்செயல் எண்ணுவரோ?
பாரினில் பிறருடைமை -- வெஃகும்
பதரினைப் போலொரு பதருண் டோ?
பேரியற் செல்வங்களும் -- இசைப்
பெருமையும் எய்திட விரும்புதியேல்,
காரியம் இதுவாமோ? -- என்றன்
காளையன் றோ? இது கருதலடா! |
93 |
‘வீரனுக் கேயிசைவார் -- திரு
மேதினி எனுமிரு மனைவியர்தாம்;
ஆரமர் தமரல்லார் -- மி்சை
ஆற்றிநல் வெற்றியில் ஓங்குதியேல்,
பாரத நாட்டினிலே -- அந்தப்
பாண்டவ ரெனப்புகழ் படைத்திடுவாய்;
சோரர்தம் மகனோநீ? -- உயர்
சோமன்ற னொருகுலத் தோன்றலன்றோ? |
94 |
‘தம்மொரு கருமத்திலே -- நித்தம்
தளர்வறு முயற்சி, மற்றோர்பொருளை
இம்மியுங் கருதாமை, -- சார்ந்
திருப்பவர் தமைநன்கு காத்திடுதல் --
இம்மையில் இவற்றினையே -- செல்வத்
திலக்கணம் என்றனர் மூதறிஞர்.
அம்ம, இங்கிதனையெலாம் -- நீ
அறிந்திலை யோ? பிழை யாற்றல் நன்றோ? |
95 |
‘நின்னுடைத் தோளனையார் -- இள
நிருபரைச் சிதைத்திட நினைப்பாயோ?
என்னுடை யுயிரன்றோ? -- எனை
எண்ணி இக் கொள்கையை நீக்குதியால்!
பொன்னுடை மார்பகத்தார் -- இளம்
பொற்கொடி மாதரைக் களிப்பதினும்
இன்னும்பல் இன்பத்தினும் -- உளம்
இசையவிட் டேஇதை மறந்திட்டா.’ |
96 |
|
|
|