பக்கம் எண் :

காவியங்கள் : கற்பனையும் கதையும்

விதுரனை வரவேற்றல்

வேறு

ஐவர் தமையுந் தனிக்கொண்டு போகி,
ஆங்கொரு செம்பொன் னரங்கில் இருந்தே: --
‘மைவரைத் தோளன், பெரும்புக ழாளன்,
மாமகள் பூமகட் கோர்மண வாளன்,
மெய்வரு கேள்வி மிகுந்த புலவன்,
வேந்தர் பிரான், திரி தாட்டிரக் கோமான்
தெய்வ நலங்கள் சிறந்திட நும்மைச்
சீரொடு நித்தலும் வாழ்கென வாழ்த்தி,
122

‘உங்களுக் கென்னிடம் சொல்லி விடுத்தான்
ஓர்செய்தி; மற்றஃ துரைத்திடக் கேளீர்!
மங்களம் வாய்ந்தநல் இத்தி புரத்தே
வையக மீதில் இணையற்ற தாகத்
தங்கும் எழிற்பெரு மண்டபம் என்று
தம்பியர் சூழ்ந்து சமைத்தனர், கண்டீர்!
அங்கதன் விந்தை அழகினைக் காண
அன்பொடு நும்மை அழைத்தனன் வேந்தன்.
123

பு{[பாட பேதம்]: ‘சிறந்திட உம்மைச்’}

‘வேள்விக்கு நாங்கள் அனைவரும் வந்து
மீண்டு பலதின மாயின வேனும்,
வாள்வைக்கும் நல்விழி மங்கையோ டேநீர்
வந்தெங்க ளூரில் மறுவிருந் தாட
நாள் வைக்கும் சோதிட ராலிது மட்டும்
நாயகன் நும்மை அழைத்திட வில்லை;
கேள்விக் கொருமி திலாதிப் னொத்தோன்
கேடற்ற மாதம் இதுவெனக் கண்டே
124