தோத்திரப்
பாடல்கள்
கண்ணம்மா (3)
|
காற்று வெளியிடைக் கண்ணம்மா -- நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன்; -- அமு
தூற்றினை
யொத்த இதழ்களும் -- நில
வூறித்
ததும்பும் விழிகளும் -- பத்து
மாற்றுப்பொன்
னொத்தநின் மேனியும் -- இந்த
வையத்தில்
யானுள்ள மட்டிலும்-எனை
வேற்று
நினைவின்றித் தேற்றியே -- இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே -- இந்தக் |
(காற்று
வெளி) |
1 |
நீயென தின்னுயிர் கண்ணம்மா -- எந்த
நேரமும்
நின்றனைப் போற்றுவேன் -- துயர்
போயின,
போயின துன்பங்கள் -- நினைப்
பொன்னெனக்
கொண்ட பொழுதிலே -- என்றன்
வாயினி
லேயமு தூறுதே -- கண்ணம்
மாவென்ற
பேர்சொல்லும் போழ்திலே -- உயிர்த்
தீயினி
லேவளர் சோதியே -- என்றன்
சிந்தனையே
என்றன் சித்தமே! இந்தக் |
(காற்று வெளி) |
2 |