திருவே நினைக்காதல்
கொண்டேனே -- நினது திரு
உருவே
மறவா திருந்தேனே -- பல திசையில்
தேடித்
திரிந்திளைத் தேனே -- நினக்கும் மனம்
வாடித்
தினங்களைத் தேனே -- அடி, நினது
பருவம்
பொறுத்திருந் தேனே -- மிகவும்நம்பிக்
கருவம்
படைத்திருந் தேனே -- இடைம்நடுவில்
பையச்
சதிகள்செய் தாயே -- அதனிலுமென்
மையல்
வளர்தல்கண் டாயே -- அமுதமழை
பெய்யக்
கடைக்கண்நல் காயே -- நினதருளில்
உய்யக்
கருணைசெய் வாயே -- பெருமைகொண்டு
வையந்
தழைக்கவைப் பேனே -- அமரயுகஞ்
செய்யத்
துணிந்துநிற் பேனே -- அடியெனது
தேனே,
எனதிரு கண்ணே, -- எனையுகந்து
தானே
வருந்திருப் -- பெண்ணே!