காவியங்கள்
: கற்பனையும் கதையும்
|
தருமன் தன்னைத்தானே
பணயம் வைத்திழத்தல்
|
மன்னவர், தம்மை மறந்துபோய், -- வெறி
வாய்ந்த திருடரை யொத்தனர். -- அங்கு
சின்னச் சகுனி சிரிப்புடன் -- இன்னும்
‘செப்புக பந்தயம்வே’றென்றான். -- இவன்
தன்னை மறந்தவ னாதலால் -- தன்னைத்
தான் பணயமென வைத்தனன். -- பின்பு
முன்னைக் கதையன்றி வேறுண்டோ? -- அந்த
மோசச் சகுனி கெலித்தனன். |
34 |
|
|
|