பல்வகைப் பாடல்கள்
|
பிழைத்த தென்னந்தோப்பு
|
வயலிடை யினிலே செழுநீர்
மடுக் கரையினிலே.
அயலெவரு மில்லை, தனியே
ஆறுதல் கொள்ளவந்தேன். |
1 |
காற்றடித் ததிலே, மரங்கள்
கணக்கிடத் தகுமோ?
நாற்றினைப்போலே சிதறி
நாடெங்கும் வீழ்ந்தனவே. |
2 |
சிறிய திட்டையிலே உளதோர்
தென்னஞ் சிறுதோப்பு
வறியவ னுடைமை அதனை
வாயு பொடிக்கவில்லை. |
3 |
வீழ்ந்தன சிலவாம் மரங்கள்
மீந்தன பலவாம்;
வாழ்ந்திருக்க வென்றே அதனை
வாயு பொறுத்துவிட்டான். |
4 |
தனிமை கண்டதுண்டு; அதிலே
சார மிருக்குதம்மா!
பனிதொலைக்கும் வெயில்,
அதுதேம்
பாகு மதுரமன்றோ; |
5 |
இரவி நின்றதுகாண் விண்ணிலே
இன்ப வொளித்திரளாய்;
பரவி யெங்கணுமே கதிர்கள்
பாடிக் களித்தனவே. |
6 |
நின்ற மரத்திடையே சிறிதோர்
நிழலினில் இருந்தேன்;
என்றும் கவிதையிலே நிலையாம்
இன்பம் அறிந்துகொண்டேன். |
7 |
வாழ்க பராசக்தி! நினையே
வாழ்த்திடுவோர் வாழ்வார்;
வாழ்க பராசக்தி! இதையென்
வாக்கு மறவாதே! |
8 |