பல்வகைப்
பாடல்கள்
தொழில்
|
இரும்பைக்
காய்ச்சி உருக்கிடு வீரே!
யந்திரங்கள்வகுத்திடு வீரே!
கரும்பைச்
சாறு பிழிந்திடு வீரே!
கடலில்மூழ்கிநன் முத்தெடுப்பீரே!
அரும்பும்வேர்வை உதிர்த்துப்
புவிமேல்
ஆயிரந் தொழில் செய்திடு வீரே!
பெரும்பு கழ்நுமக்
கேயிசைக் கின்றேன்.
பிரம தேவன் கலையிங்கு நீரே!
|
1 |
மண்ணெடுத்துக்
குடங்கள் செய்வீரே!
மரத்தை வெட்டி
மனைசெய்கு வீரே!
உண்ணக் காய்கனி
தந்திடு வீரே!
உழுது நன்செய்ப்
பயிரிடு வீரே!
எண்ணெய், பால்நெய்
கொணர்ந்திடு வீரே!
இழையை நூற்றுநல்
லாடைசெய் வீரே!
விண்ணி னின்றெமை
வானவர் காப்பார்;
மேவிப் பார்மிசைக்
காப்பவர் நீரே!
|
2 |
பாட்டும்
செய்யுளும் கோத்திடு வீரே!
பரத நாட்டியக்
கூத்திடு வீரே!
காட்டும் வையப் பொருள்களின் உண்மை
கண்டு சாத்திரம்
சேர்த்திடு வீரே!
நாட்டி லேயறம் கூட்டி
வைப்பீரே!
நாடும் இன்பங்கள்
ஊட்டி வைப்பீரே;
தேட்ட மின்றி விழியெதிர்
காணும்
தெய்வ மாக
விளங்குவிர் நீரே! |
3 |