தனிப்
பாடல்கள் : பொதுமைப் பாடல்கள்
|
சமூகம்
|
|
வாழ்க மனைவியாம் கவிதைத் தலைவி!
தினமும் இவ்வுலகில் சிதறியே நிகழும்
பலபல பொருளிலாப் பாழ்படு செய்தியை
வாழ்க்கைப் பாலையில் வளர்பல முட்கள்போல்
பேதை யுலகைப் பேதைமைப் படுத்தும்
|
5 |
வெறுங் கதைத்திரளை, வெள்ளறி வுடைய
மாயா சக்தியின் மகளே, மனைக்கண்
வாழ்வினை வகுப்பாய், வருடம் பலவினும்
ஓர்நாட் போலமற் றோர்நாள் தோன்றாது
பலவித வண்ணம் வீட்டிடைப் பரவ |
10 |
நடத்திடுஞ் சக்தி நிலையமே, நன்மனைத்
தலைவீ, ஆங்கத் தனிப்பதர்ச் செய்திகள்
அனைத்தையும் பயன் நிறை அனுபவ மாக்கி,
உயிரிலாச் செய்திகட்கு உயிர்மிகக் கொடுத்து,
ஒளியிலாச் செய்திகட்கு ஒளியருள் புரிந்து, |
15 |
வான சாத்திரம் மகமது வீழ்ச்சி்
சின்னப் பையல் சேவகத் திறமை
எனவரு நிகழ்ச்சி யாவே யாயினும்
அனைத்தையும் ஆங்கே அழகுறச் செய்து,
இலௌகிக வாழ்க்கையில் பொருளினை இணைக்கும் |
20 |
பேதை மாசக்தியின் பெண்ணே, வாழ்க.
காளியின் குமாரி, அறங்காத் திடுக!
வாழ்க! மனையகத் தலைவி வாழ்க! |
23 |
|
|
|