பக்கம் எண் :

பாமாலை : பக்தி பாடல்கள்

தோத்திரப் பாடல்கள்


வேள்விப் பாட்டு
1. இயற்கையென் றுனையுரைப்பாா -- சிலர் இணங்கும் ஐம்பூதங்கள்
   என்றிசைப்பார்
  செயற்கையின் சக்தியென்பார் -- உயிர்த் தீயென்பர்,
   அறிவென்பர், ஈசனென்பர்
  வியப்புறு தாய்நினக்கே -- இங்கு வேள்விசெய் திடுமெங்கள்
   ‘ஓம்’ என்னும்
  நயப்படு மதுவுண்டே -- சிவ நாட்டியங் காட்டிநல்
   லருள்புரிவாய்.
 
2. அன்புறு சோதியென்பார் -- சிலர் ஆரிருட் காளியென்
   றுனைபுகழ்வார்
  இன்பமென் றுரைத்திடுவாா -- சிலர் எண்ணருந் துன்பமென்
   றுனையிசைப்பார்
  புன்பலி கொண்டுவந்தோம் -- அருள் பூண்டெமைத் தேவர்தங்
   குலத்திடுவாய்
  மின்படு சிவசக்தி -- எங்கள் வீரைநின் திருவடி
   சரண்புகுந்தோம்.
 
3. உண்மையில் அமுதாவாய -- புண்கள் ஒழித்திடு வாய்களி
   உதவிடுவாய்
  வண்மைகொள் உயிர்ச்சுடராய -- இங்கு வளர்ந்திடு வாய் என்றும்
   மாய்வதிலாய்
  ஒண்மையும் ஊக்கமுந்தான -- என்றும் ஊறிடுந் திருவருட்
   சுனையாவாய்
  அண்மையில் என்றும் நின்றே --
4. தெளிவுறும் அறிவினைநாம் -- கொண்டு சேர்த்தனம், நினக்கது
   சோமரசம்
  ஒளியுறும் உயிர்ச்செடியில் -- இதை ஓங்கிடு மதிவலி தனிற்
   பிழிந்தோம
  களியுறக் குடித்திடுவாய் -- நின்றன் களிநடங் காண்பதற்
   குளங்கனிந்தோம
  குளிர்சுவைப் பாட்டிசைத்தே -- சுரர் குலத்தினிற் சேர்ந்திடல்
   விரும்புகின்றோம்.
 
5. அச்சமும் துயரும் என்றே -- இரண்டு அசுரர்வந் தெமையிங்கு
   சூழ்ந்துநின்றார்
  துச்சமிங் கிவர்படைகள -- பல தொல்லைகள் கவலைகள்
   சாவுகளாம
  இச்சையுற் றிவரடைந்தாா -- எங்கள் இன்னமு தைக்கவர்ந்
   தேகிடவே
6. கோடிமண் டபந்திகழும -- திறற் கோட்டையிங் கிதையவர்
   பொழுதனைத்தும
  நாடிநின் றிடர்புரிவாா -- உயிர் நதியினைத் தடுத்தெமை
   நலித்திடுவார
  சாடுபல் குண்டுகளால -- ஒளி சார்மதிக் கூடங்கள்
   தகர்த்திடுவார்
  பாடிநின் றுனைப்புகழ்வோம -- எங்கள் பகைவரை அழித்தெமைக்
   காத்திடுவாய்.
 
7. நின்னருள் வேண்டுகின்றோம் -- எங்கள் நீதியுந் தர்மமும்
   நிலைப்பதற்கே
  பொன்னவிர் கோயில்களும் -- எங்கள் பொற்புடை மாதரும்
   மதலையரும்
  அன்னநல் லணிவயல்கள -- எங்கள் ஆடுகள் மாடுகள்
   குதிரைகளும்
  இன்னவை காத்திடவே -- அன்னை இணைமலர்த் திருவடி
   துணைபுகுந்தோம்.
 
8. எம்முயி ராசைகளும -- எங்கள் இசைகளும் செயல்களும்
   துணிவுகளும்
  செம்மையுற் றிடஅருள்வாய் -- நின்றன் சேவடி அடைக்கலம்
   புகுந்துவிட்டோம்.
  மும்மையின் உடைமைகளும -- திரு முன்னரிட் டஞ்சலி செய்து
   நிற்போம்