தோத்திரப்
பாடல்கள்
கேட்பன
|
நல்லதோர் வீணைசெய்தே -- அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி,
சிவசக்தி! -- எனைச்
சுடர்மிகும்
அறிவுடன் படைத்து விட்டாய்,
வல்லமை
தாராயோ, -- இந்த
மாநிலம்
பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி,
சிவசக்தி! -- நிலச்
சுமையென
வாழ்ந்திடப் புரிகுவையோ? |
1 |
விசையுறு பந்தினைப்போல் -- உள்ளம்
வேண்டிய
படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு
மனங்கேட்டேன், -- நித்தம்
நவமெனச்
சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத்
தீசுடினும் -- சிவ
சக்தியைப்
பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு
மதிகேட்டேன்; -- இவை
அருள்வதில்
உனக்கெதுந் தடையுளதோ?
|
2 |
|
|
|