தோத்திரப்
பாடல்கள்
ஓம் சக்தி
|
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப்பூண்.
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம் இவள்
பார்வைக்கு நேர்பெருந்தீ.
வஞ்சனை
யின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல்லாம்
தஞ்சமென்
றேயுரைப்பீர் அவள் பேர் சக்தி
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம். |
1 |
“நல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்தி
நலத்தை நமக்கிழைப்பாள்;
அல்லது
நீங்கும்” என்றேயுல கேழும்
அறைந்திடு வாய்முரசே!
சொல்லத்
தகுந்த பொருளன்று காண் இங்குச
சொல்லு மவர்தமையே
அல்லல்
கெடுத்தம ரர்க்கிணை யாக்கிடும்
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம். |
2 |
நம்புவ தேவழி யென்ற மறைதன்னை
நாமின்று நம்பிவிட்டோம்.
கும்பிட்டெந்
நேரமும் “சக்தி” யென் றாலுனைக்
கும்பிடு வேன்மனமே.
அம்புக்கும்
தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்சமில் லாதபடி
உம்பர்க்கும்
இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம். |
3 |
பொன்னைப் பொழிந்திடு, மின்னை வளர்திடு,
போற்றி உனக்கிசைத்தோம்;
அன்னை
பராசக்தி என்றுரைத்தோம் தளை
அத்தனையுங் களைந்தோம்;
சொன்ன
படிக்கு நடந்திடு வாய் மன
மே தொழில் வேறில்லை காண்;
இன்னுமதேயுரைப்
போம் சக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.
|
4 |
வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
ளாக விளங்கிடுவாய்!
தெள்ளு
கலைத்தமிழ் வாணி, நினக்கொரு
விண்ணப்பஞ் செய்திடுவேன்,
எள்ளத்
தனைப்பொழுதும்பயனின்றி
இரா தென்றன் நாவினிலே
வெள்ள
மெனப்பொழி வாய்சக்தி
வேல்சக்தி வேல்சக்தி வேல்சக்தி வேல்!
|
5 |