தோத்திரப்
பாடல்கள்
மஹாசக்தி
|
சந்திர னொளியில் அவளைக் கண்டேன்
சரணமென்று புகுந்து கொண்டேன்
இந்திரி யங்களை வென்று விட்டேன்
எனதென் ஆசையைக் கொன்று விட்டேன்,
|
(சந்) |
1 |
[பாட பேதம்]:
‘சந்திரிகையி லவளை கண்டேன்’
-- 1910 ஆம் வருடப் பதிப்பு.
|
|
பயனெண் ணாமல் உழைக்கச் சொன்னாள்
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்
துயரி லாதெனைச் செய்து விட்டாள்
துன்ப மென்பதைக் கொய்து விட்டாள்.
|
(சந்) |
2 |
மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்
வீசி நிற்கும் வளியைச் செய்தாள்
வான்க ணுள்ள வெளியைச் செய்தாள்
வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள். |
(சந்) |
3 |