பக்கம் எண் :

பாமாலை : பக்தி பாடல்கள்

தோத்திரப் பாடல்கள்

வெற்றி


எடுத்த காரியம் யாவினும் வெற்றி
எங்கு நோக்கினும் வெற்றிமற் றாங்கே
விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி
வேண்டி னேனுக் கருளினள் காளி;
தடுத்து நிற்பது தெய்வத மேனும்
சாரு மானுட மாயினும் அஃதைப்
படுத்து மாய்ப்பள் அருட்பெருங் காளி
பாரில் வெற்றி எனக்குறு மாறே.

1

எண்ணு மெண்ணங்கள் யாவினும் வெற்றி
எங்கும் வெற்றி எதனினும் வெற்றி
கண்ணு மாருயி ரும்மென நின்றாள்
காளித் தாயிங் கெனக்கருள் செய்தாள்
மண்ணும் காற்றும் புனலும் அனலும்
வானும் வந்து வணங்கிநில் லாவோ?
விண்ணு ளோர்பணிந் தேவல்செய் யாரோ
வெல்க காளி பதங்களென் பார்க்கே?
2


[பாட பேதம்]: 1910 ஆம் வருடத்தில் வெளிவந்த பதிப்பில் மூன்றாம் பாடலின் முதலிரண்டடிகள் பின்வருமாறு காணப் படுகின்றன:

‘கள்ள முருகாதோ -- அம்மா பக்திக் கண்ணீர் பெருகாதோ?
உள்ளந் தெளியாதோ -- பொய்யாணவ ஊன மொழியாதோ?’