வேதாந்தப்
பாடல்கள்
|
|
பல்லவி
அல்லா, அல்லா, அல்லா!
சரணங்கள்
|
பல்லாயிரம் பல்லாயிரம் கோடிகோடி யண்டங்கள்
எல்லாத் திசையிலுமோ ரெல்லையில்லா வெளிவானிலே
நில்லாது சுழன்றோட நியமஞ்செய்தருள் நாயகன்
சொல்லாலும் மனத்தாலுந் தொடரொணாத பெருஞ்சோதி! |
|
(அல்லா, அல்லா, அல்லா,!)
|
1 |
கல்லாதவ ராயினும் உண்மை சொல்லாதவ ராயினும்
பொல்லாதவ ராயினும்தவ மில்லாதவ ராயினும்
நல்லாருரை நீதியின்படி நில்லாதவ ராயினுமி
எல்லாரும் வந்தேத்து மளவில் யமபயங் கெடச் செய்பவன்
|
|
(அல்லா, அல்லா, அல்லா,!)
|
2 |
|
|
|