வேதாந்தப்
பாடல்கள்
|
|
பல்லவி
ஜய பேரிகை கொட்டடா
-- கொட்டட
ஜய பேரிகை கொட்டடா! (ஜய)
|
|
|
சரணங்கள்
பயமெனும் பேய்தனை யடித்தோம் -- பொய்ம்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்.
|
(ஜய
பேரிகை) |
1 |
இரவியி னொளியிடைக் குளித்தோம்-ஒளி
இன்னமு தினையுண்டு களித்தோம்
கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்
காலன் நடுநடுங்க விழித்தோம். | (ஜய
பேரிகை) |
2 |
காக்கை, குருவி எங்கள் ஜாதி -- நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
நோக்க நோக்கக் களியாட்டம். |
(ஜய
பேரிகை) |
3 |
[பாட பேதம்]:
?துன்பப்?
பா. க.-8 |
|